சிறுவனை கொன்று ரத்தம் குடித்த நபர்.. மூளையை விழுங்க முயன்ற கொடூரன்.. கேட்கும்போதே நடுங்குதே
போபால்: சகோதரியை பார்க்க சென்ற 16 வயது சிறுவனை சுத்தியலால் தலையில் தாக்கி கொன்ற நபர் அவரது ரத்தத்தை குடித்து, மூளையை சாப்பிட முயன்ற சம்பவம் அதிர வைத்துள்ளது. மனைவியை கொன்று சிறை சென்று சமீபத்தில் தான் வெளியே வந்த அந்த கொடூரன் குறித்த திடுக்கிட வைக்கம் தகவல் வெளியாகி உள்ளது.
நம் நாட்டில் சமீபகாலமாக கொடூரமான பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கும் பெண்ணை அவரது காதலன் கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசுவது, காட்டுக்குள் வீசுவது போன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துள்ளன.
இதற்கிடையே தான் தற்போது மத்திய பிரதேசத்தில் கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. உடன் பிறந்த சகோதரியை பார்த்து சகோதரத்துவ பண்டிகையை கொண்டாடபோன சிறுவனை, ஒருவர் கொன்று ரத்தம் குடித்து, மூளையை உண்ண முயன்ற அதிர்ச்சி சம்பவம் பட்டப்பகலில் நடந்துள்ளது. இதுபற்றிய திடுக்கிட வைக்கும் சம்பவத்தை இங்கு பார்க்கலாம்.

சகோதரத்துவ பண்டிகை
வடமாநிலங்களில் 'ஹோலி பாய் தூஜ்' என்ற சகோதரத்துவ பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் சகோதரிகள், தங்களின் சகோதரர்களின் நெற்றியில் திலகமிட்டு ஆரத்தி எடுப்பார். அதன்பிறகு சகோதரிகளுக்கு அவர்களின் அண்ணன், தம்பிகள் பரிசுகள் வழங்குவார்கள்.
16 வயது சிறுவன்
அந்தவகையில் இந்த ஆண்டு 'ஹோலி பாய் தூஜ்' பண்டிகை கடந்த 5ம் தேதி கொண்டாடப்பட்டது. இதற்காக மத்திய பிரதேச மாநிலம் தாமோ மாவட்டம் சாமனா கிராமத்தில் உள்ள சகோதரியை சந்திக்க 16 வயது நிரம்பிய பரத் விஸ்வகர்மா என்ற சிறுவன் சென்று கொண்டிருந்தார்.
தலையில் அடித்து...
அப்போது பரத்துக்கு பின்னால் ஒருவர் வந்தார். அவரது பெயர் குட்டா படேல். திடீரென்று குட்டா படேல் தனது கையில் இருந்த சுத்தியலை எடுத்து பரத்தின் தலையில் அடித்தார். இதில் பரத் நிலைக்குலைந்து கீழே விழுந்தார். இருப்பினும் ஆத்திரம் அடங்காத கட்டா படேல், சிறுவன் பரத்தை விடாமல் தாக்கினார். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். தலையில் இருந்து ரத்தம் கொட்டியது.
ரத்தம் குடித்து.. மூளையை உண்ண
இந்த சமயத்தில் குட்டா படேல் அங்கிருந்து செல்லவில்லை. இறந்த சிறுவனின் தலையில் இருந்து கொட்டிய ரத்தத்தை குடித்தோடு, மூளையை எடுத்து வாயில் வைத்தார். இதற்கிடையே அங்கு வந்தவர்கள் குட்டாவின் செயலை பார்த்து அதிர்ந்து போயினர். அவர்கள் சத்தம் எழுப்பியதால் பயந்துபோன குட்டா படேல் அருகே உள்ள தோட்டத்துக்குள் புகுந்து ஓடினார்.
மடக்கி பிடித்த மக்கள்
இதையடுத்து அவரை விரட்டி சென்ற கிராம மக்கள் மடக்கி பிடித்தனர். இதற்கிடையே சம்பவ இடத்துக்கு போலீசார் வந்தனர். போலீசாரிடம் குட்டா படேல் ஒப்படைக்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். குட்டா படேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியை கொன்றவர்...
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குட்டா படேல் சமீபத்தில் தான் சிறையில் இருந்து வெளியே வந்தார். மனைவியை கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்ட்டு வெளியே வந்த குட்டா படேல் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தையே நடுங்க வைத்துள்ளது.
இதுபற்றி போலீசார் கூறுகையில், ''கொலை செய்யப்பட்டசிறுவனுக்கும், கொலை செய்த நபருக்கும் இடையே எந்த முன்விரோதமும் இல்லை.சிறுவன் தனது சகோதரியின் வீட்டுக்கு சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.
சிறுவனை கொன்ற பிறகு ரத்தத்தை குடித்து மூளையை வாயில் வைத்து திங்க முயன்றதாக கிராமத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது'' என்றனர்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications