ம.பி. கோவில் கூட்ட நெரிசல்- பலி எண்ணிக்கை 115 ஆக உயர்வு: 21 உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட்
தாதியா: மத்திய பிரதேசத்தில் கோவிலுக்கு செல்லும் வழியில் பாலத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தாதியா மாவட்டத்தின் எஸ்.பி. உள்பட 4 உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் தாதியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் மாதா கோவிலில் நவராத்திரியின் கடைசி நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கலந்து கொள்ள வழக்கத்தை விட ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். கோவிலை அடைய அவர்கள் சிந்து நதியின் மீதுள்ள பாலத்தை கடந்து வர வேண்டும்.

பாலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கொண்டிருக்கையில் பாலம் இடிந்து விழப் போகிறது என்ற வதந்தி பரவியது. இதையடுத்து மக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள முந்தியடித்து ஓடியதில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 111 பேர் பலியாகினர், 100 பேர் காயம் அடைந்தனர். இந்நிலையில் பலி எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையே தாதியா மாவட்ட மாஜிஸ்திரேட், எஸ்.பி. உள்பட 21 அதிகாரிகளை மாநில அரசு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications