டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதில் 55 வயது பெண் பலி
போபால்: மத்திய பிரதேசத்தில் டிக்கெட் பரிசோதகர் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதில் 55 வயது பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் ஓம் குமாரி தெம்ரே(55). ஷாஜாபூர் மாவட்டம் பெர்சாவில் வசித்து வந்த அவருடைய மகள் இறந்துவிட்டார். இதையடுத்து குமாரி தனது குடும்பத்துடன் பெர்சா சென்று மகளின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் தனது மற்ற 2 மகள்கள், மகன் மற்றும் மருமகனுடன் இந்தூர் ஜம்மு தாவி மால்வா எக்ஸ்பிரஸ் மூலம் போபாலுக்கு கிளம்பினார். அவர்கள் பொது கம்பார்ட்மென்டுக்கான டிக்கெட் எடுத்திருந்தனர். அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால் ரிசர்வ்ர்ட் பெட்டியில் ஏறிவிட்டனர்.
இது குறித்து குமாரியின் மகள் நேஹா கூறுகையில்,
ரயில் கிளம்புகையில் டிக்கெட் பரிசோதகர் வந்து பொது கம்பார்ட்மென்டுக்கான டிக்கெட்டை வைத்துக் கொண்டு வேறு பெட்டியில் ஏறியவர்களை திட்டியதுடன் அவர்களை கீழே தள்ளிவிட்டார். அவர் என் அம்மாவையும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். கீழே விழுந்த என் அம்மா மீது ரயில் ஏறியதில் அவரது தலை தணியாக உடல் தணியாக துண்டானது.
என் அம்மாவை தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகரை தண்டிக்க வேண்டும் என்றார்.
இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications