மதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் நெரிசல்: 2 பேர் பலி
மதுரை சித்திரைத் திருவிழாவில், அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று அதிகாலை நடைபெற்றது.
அழகரைக் காண்பதற்காக பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்தனர். அதில் மதுரை கோரிப்பாளையம் பகுதியிலும், தமுக்கம் பகுதிகளும் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் இருவர் பலியாகியுள்ளனர்.
24க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் தற்போது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வைகையாற்றில் நெரிசலில் சிக்கியவர்கள் குறித்து தகவல் தெரிந்து கொள்ள மதுரை மாவட்ட நிர்வாகம் உதவி எண் வெளியிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 9498042434 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களின் விவரங்களை அறியாலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(இந்த செய்தி தொடர்பான மேற்கொண்டு வரும் தகவல்கள் இதே பக்கத்தில் சேர்க்கப்பட்டு மேம்படுத்தப்படும். நேயர்கள் கூடுதல் தகவல்களுக்கு இதே இணைப்பை மீண்டும் பயன்படுத்தலாம்.)
https://www.youtube.com/watch?v=Kb4b9saKVoI
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













Click it and Unblock the Notifications