Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வசந்த பஞ்சமி..கும்பமேளாவில் நடந்த அதிசயம்! வானிலிருந்து கலர் கலராய்.. என்ன அது? அதிசயித்த பக்தர்கள்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்திரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று காலை 8:00 மணி வரைக்குள்ளாகவே 62 லட்சம் பக்தர்கள் புனித நீராடிய நிலையில், வானில் இருந்து ஹெலிகாப்டர்கள் வண்ண வண்ண பூக்களை பக்தர்கள் மீது தூவிய காட்சிகள் வெளியாகி உள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.

maha kumbh mela 2025 stampede lucknow

அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா நிகழ்வை பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு கோலாகலமாக நடத்தி வருகிறது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெறுகிறது.

இந்தியா முழுவதும் மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் யோகிகள் சாமியார்கள் அங்கு திரண்டுள்ளனர். இதுவரை கோடி கணக்கானோர் மகா கும்ப மேளாவில் புனித நீராடி இருக்கும் நிலையில் மேலும் பலர் அங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வரை முப்பது கோடிக்கும் அதிகமான பக்தர்கள் அங்கு சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் விசேஷம் மிகுந்த வசந்த பஞ்சமி இன்று கடைபிடிக்கப்படுகிறது மாதம் தோறும் வளர்பிறையில் ஐந்தாம் நாளாகவும் தேய்பிறையில் ஐந்தாம் நாளாகவும் பஞ்சமி திதி வருகிறது. இதில் கருட பஞ்சமி, ரிஷி பஞ்சமி, வசந்த பஞ்சமி ஆகியவை பிரசித்தி பெற்றவை. ஆடி அமாவாசைக்கு பிறகு கருட பஞ்சமியும், ஆவணி மாதத்தில் வரும் பஞ்சமி ரிஷி பஞ்சமி என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் தை அமாவாசைக்கு பின் வரும் பஞ்சமி வசந்த பஞ்சமியாக கொண்டாடப்படுகிறது.

maha kumbh mela 2025 stampede lucknow

தமிழகத்தில் வசந்த பஞ்சமி வழிபாடு குறைவாக இருந்தாலும் வட மாநிலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் திரிவேணி சங்கமத்தில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்தது.

உத்தரப்பிரதேச மாநில அரசு அதிகாரிகள் கூற்றுப்படி இன்று காலை 8 மணி வரையில் மட்டுமே சுமார் 62 லட்சத்து 25 ஆயிரம் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி இருக்கிறார்கள். மேலும் நேற்று வரை 34 கோடியே 97 லட்சம் பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர். இதன் மூலம் தற்போது வரை சுமார் 36 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளனர்.

இந்த நிலையில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு திருவேணி சங்கமத்தில் புனித நீராடிய பக்தர்கள் மீது ஹெலிகாப்டர்கள் மூலம் உத்தர பிரதேசத்தில் வண்ண வண்ண பூக்கள் தூவப்பட்டுள்ளது. தற்போது அந்த காட்சிகளை உத்தர பிரதேச மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு வெளியிட்டு இருக்கிறது.

வசந்த பஞ்சமி அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடுவது மிகச் சிறப்பானதாக கருதப்படுகிறது. மேலும் அன்றைய தினத்தில் சரஸ்வதி தேவிக்கு மஞ்சள் வண்ண ஆடைகளை அணிவித்து ,மஞ்சள் நிற பூக்கள் மூலம் பூஜை செய்வதும், பிள்ளையாரை மஞ்சளில் வைத்து பூஜிப்பதும், லட்டு உள்ளிட்ட மஞ்சள் நிற பதார்த்தங்களை படைப்பதும், தங்கம் உள்ளிட்டவற்றை வாங்குவதும் வசந்தத்தை கொண்டு வரும் என்பது ஐதீகம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+