வயலில் நுழைந்த ஆடு: பீகாரில் தலித் சிறுவனை உயிருடன் எரித்துக் கொன்ற உயர் ஜாதியினர்
பாட்னா: பீகாரில் ஆடுகள் வயலில் நுழைந்ததற்காக மகாதலித் சிறுவனை உயர் ஜாதியைச் சேர்ந்த 4 பேர் உயிருடன் எரித்துக் கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் ரோதாஸ் மாவட்டத்தில் உள்ள மோகன்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஜியுத் ராம் என்பவரின் மகன் சாய்ராம்(15). மகாதலித் சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் புதன்கிழமை காலை ஆடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது அவரின் ஆடுகள் உயர் ஜாதியைச் சேர்ந்த குகும் சிங் என்பவரின் வயலுக்குள் நுழைந்துவிட்டன. இதை பார்த்த சிங் மற்றும் அவரது உதவியாளர்கள் சிறுவனை பிடித்து அடித்து நொறுக்கினர்.
சிறுவன் அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு சென்றார். ஆனால் குகும் சிங் தனது ஆதரவாளர்கள் 3 பேருடன் சிறுவனின் வீட்டுக்கே வந்து அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில் சிறுவனுக்கு 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. சிறுவனை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவமனையில் சேர்த்த சிறிது நேரத்தில் சிறுவன் பரிதாபமாக பலியானார்.
இதையடுத்து ஜியுத் ராம் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 4 பேரையும் தேடி வருகிறார்கள். பீகார் முதல்வர் ஜித்தன் ராம் மஞ்சியும் மகாதலித் சமூகத்தை சேர்ந்தவர். அவர் கோவிலுக்கு சென்றால் அது தீட்டு என்று அவர் கால் பட்ட இடத்தை கழுவிவிடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications