நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வெற்றி உறுதியானது!
Recommended Video
நாக்பூர்: மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.
மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடந்து வருகிறது.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் பாஜக சிவசேனா கூட்டணி 157 இடங்களிலும் (வெற்றி மற்றும் முன்னணி), காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சி 104 இடங்களிலும் (வெற்றி மற்றும் முன்னிலை) முன்னிலையில் உள்ளன. மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் 26 இடங்களில் வெற்றி மற்றும் முன்னிலையில் உள்ளன.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் போடடியிட்ட பாஜகவின் முதல்வர் வேட்பாளரும், அம்மாநில முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தன்னை எதிர்த்து போட்டியிட்டுள்ள ஆஸிஷ் தேஷ்முக்கைவிட 43 ஆயிரத்து 734 வாக்குகள்அதிகம் பெற்றுள்ளார். ஏறக்குறைய தேவேந்திர பட்னாவிஸ் வெற்றி பெற்றுவிட்டார். இன்னும முழுமையாக வாக்குகள் எண்ணப்பட்டாததால் வெற்றி அறிவிக்கப்படவில்லை.
இதனிடையே கடந்த 2014 தேர்தலில் இதே நாக்பூர் தென்மேற்கு தொகுதியில் தான் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் போட்டியிட்டார். அப்போது அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரைவிட 58 ஆயிரத்து 942 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.