மகாராஷ்டிராவில் யாருடன் சேர்ந்து ஆட்சியமைக்கலாம்.. 'தெளிவான' குழப்பத்தில் பாஜக
மும்பை: ஹரியானாவில் சிக்கல் இல்லை. ஆனால் மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு குழப்பம் அதிகரித்துள்ளது. இங்கு தனிப்பெரும் கட்சியாக வந்து விட்டபோதிலும் கூட யாருடன் சேர்ந்து ஆட்சியமைப்பது என்பதில் அது குழம்பிப் போயுள்ளது.
கடந்த 15ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டது. அதன்படி, இரு மாநிலங்களிலும் பாஜக இடங்களில் வெற்றி பெற்றது. இதில் ஹரியானாவில் தனித்து ஆட்சி அமைக்கிறது. மகாராஷ்டிராவில் தனிப்பெரும் கட்சியாக வந்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். பின்னர், கட்சி மேலிட பார்வையாளராக மகாராஷ்டிராவில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், ஹரியானாவில் வெங்கையா நாயுடுவும் நியமிக்கப் பட்டனர். இவர்கள் தலைமையிலான குழு கூடி அவ்விரு மாநில முதல்வர்களைத் தேர்வு செய்யும் என கூறப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில், நிபந்தனையின்றி, வெளியிலிருந்து பாஜகவுக்கு ஆதரவு தரத் தயாராக இருப்பதாக தேசியவாத காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதேசமயம், சிவசேனாவும் ஆதரவு தர முன்வரும் என்றே கூறப்படுகிறது. ஆனால் தங்களிடம் கோரினால்தான் ஆதரவு தருவோம் என்று சிவசேனா காத்திருக்கிறது.
இவர்களில் யாருடைய ஆதரவை நாடுவது என்பதில் பாஜக குழப்பம் அடைந்துள்ளதாம்.
அதேநேரத்தில், ஹரியானாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில், பாஜக மேலிட பார்வையாளர்களாக மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை மந்திரி வெங்கையா நாயுடு, கட்சியின் துணைத்தலைவர் தினேஷ் சர்மா ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
அக்கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படுவார் எனத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து கவர்னரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கும் கடிதத்தை சமர்ப்பிக்கப்போவதாக பாஜக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications