மகாராஷ்டிரா போலீசாருக்கு மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் கருவியாம்!
மகாராஷ்டிராவில் மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் கருவி போலீசாருக்கு வழங்கப்படுகிறது.
Subscribe to Oneindia Tamil
மும்பை: மாட்டிறைச்சியை கண்டுபிடிக்கும் கருவி மகாராஷ்டிரா போலீசருக்கு வழங்கப்பட்டுள்ளது. அரை மணிநேரத்தில் ஒருவர் வைத்திருப்பது ஆட்டிறைச்சியா அல்லது மாட்டிறைச்சியா என இந்த கருவி கண்டுபிடித்துவிடுமாம்.
மாட்டிறைச்சிக்கு ஏற்கனவே மகாராஷ்டிரா பாஜக அரசு தடை விதித்துள்ளது. அண்மையில் மத்திய அரசும் தடை விதித்தது.

தற்போது இதைத் தீவிரமாக செயல்படுத்துவதில் மகாராஷ்டிரா மாநில அரசு முனைப்புடன் உள்ளது. மாட்டிறைச்சியைக் கண்டுபிடிக்கும் கருவிகள் அம்மாநில போலீசாருக்கு வழங்கப்பட இருக்கிறது.
இந்த கருவி ஒன்றின் விலை ரூ8,000. இதனால் பிடிபடுவது மாட்டிறைச்சிதானா என்பது அரை மணிநேரத்தில் உறுதியாகிவிடுமாம்.












Click it and Unblock the Notifications