Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்!!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா முதல்வர் பதவியை பிரித்விராஜ் சவாண் ராஜினாமா செய்த நிலையில் அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி இன்று முதல் அமல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் அக்டோபர் 15ம் தேதி நடைபெறுகிறது. இதில், தொகுதி பங்கீடு குறித்து பல்வேறு கட்டமாக ஆளும் காங்கிரஸ் , தேசியவாத காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

சுழற்சி முறையில் இரண்டரை ஆண்டுகால முதலமைச்சர் பதவி தர வேண்டும். சரிசமமாக 144 தொகுதியை ஒதுக்க வேண்டும் என்ற முடிவில் தேசியவாத காங்கிரஸ் உறுதியாக இருந்தது. இதில் உடன்பாடு ஏற்படாமல் இருந்தது.

Maharashtra Goes Under President's Rule

இதற்கிடையில், சிவசேனா உடனான 25 ஆண்டுகால கூட்டணியை, முறித்துக்கொள்வதாக பாஜக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில், காங்கிரஸ் உடனான 15 ஆண்டுகால கூட்டணியை முறித்துக் கொள்வதாக தேசியவாத காங்கிரஸ் அறிவித்தது. மேலும் அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெற்றது.

இதனால், சட்டசபையில் காங்கிரசின் பலம் 82 ஆக குறைந்தது. ஆட்சியமைக்க குறைந்தது 145 எம்எல்ஏக்கள் ஆதரவு வேண்டும் என்ற நிலையில், போதுமான மெஜாரிட்டி இல்லாததால், முதல்வர் பதவியை சவாண் ராஜினாமா செய்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+