மகாராஷ்டிரா அமைச்சர் முகத்தில் மை வீச்சு: கண்ணில் படுகாயம்
மும்பை: மகாராஷ்டிரா அமைச்சர் மீது போராட்டக்காரர்கள் மை வீசியதில் அவரது கண்களில் காயம் ஏற்பட்டது.
மகாராஷ்டிராவில் தனகர் (ஆடு மேய்ப்போர்) ஜாதியினர், தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதை வலியுறுத்தி, கடந்த வாரம் நடந்த போராட்டத்தின்போது அரசு பஸ்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.
இந்நிலையில் புனே மாவட்டம் இந்தாபுர் பேரவை தொகுதிக்குட்பட்ட பிக்வான் பகுதியில் இன்று நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க அம்மாநில கூட்டுறவு மற்றும் சட்டப்பேரவை விவகார துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் பாட்டீல் வந்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட போராட்டக்காரர்கள் கெரோ செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆர்ப்பாட்டக்கார்களில் சிலர் அமைச்சர் முகத்தில் மை வீசியதாக தெரிகிறது. கண்ணில் மை பட்டதால் அமைச்சர் துடிதுடித்து அங்கேயே உட்கார்ந்துவிட்டார். இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக அமைச்சர் புனேயிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மேல் சிகிச்சை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications