மகாராஷ்டிரா: மாணவர்களை கால் அமுக்கி விட வைத்த ஆசிரியை பணி நீக்கம்
Subscribe to Oneindia Tamil

மகாராஷ்டிர மாநிலம் அகோலா பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பணி புரிந்து வரும் 7-ம் வகுப்பு ஆசிரியை ஒருவர், மாணவர்களை கால் பிடித்து விடும்படி கூறியுள்ளார். ஆசிரியரின் கட்டளைப் படி மாணவர் ஒருவரும் ஆசிரியைக்கு, மேஜைக்கு அடியில் அமர்ந்து கால்களைப் பிடித்து மசாஜ் செய்துள்ளான்.
இதை மற்றொரு மாணவன் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளான். பின்னர் அதனை மற்ற மாணவர்களின் பார்வைக்கு அனுப்பியுள்ளான். இவ்வாறாக பரவிய வீடியோவின் மூலம் ஆசிரியரின் அடக்குமுறை அம்பலமானது.
அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வீடியோக் காட்சிகளை ஆய்வு செய்த கல்வித்துறை ஆசிரியை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது. இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications