காந்தியை மகிஷாசுரனாக சித்தரித்து இந்துமகா சபை அட்டூழியம்- மத்திய அரசு அதிரடி உத்தரவால் நீக்கம்!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் மகாத்மா காந்தியடிகளை மகிஷாசுரனாக சித்தரித்து நவராத்திரி பந்தல் அமைத்திருந்தது இந்து மகாசபை. இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில் மகாத்மா காந்தியடிகளை அவமதிக்கும் உருவம் அகற்றப்பட்டது.
மகாத்மா காந்தியடிகளை ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தை சேர்ந்த நாதுராம் கோட்சே சுட்டுப் படுகொலை செய்தார். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதம் இது. அதுவும் நாட்டின் தேசப் பிதாவையே படுகொலை செய்த காரணத்தால் ஆர்.எஸ்.எஸ்.இயக்கம் முதன் முதலாக தடை செய்யப்பட்டது. பின்னர் அந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்டது.

கோட்சே எனும் மகாத்மாவாம்
இன்றளவும் மகாத்மா காந்தியை விமர்சிப்பது இந்துத்துவா இயக்கங்களின் கொள்கையாக உள்ளது. காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை மகாத்மா என புகழ்வதும் தொடருகிறது. மகாத்மா காந்தியடிகளை பொம்மை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்வது போன்ற காட்சிகளை இந்துமகா சபை ஆதரவாளர்கள் வெளியிட்டும் வருகின்றனர்.

நவராத்திரி பந்தல்
இதன் உச்சமாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இந்து மகா சபையினர் அமைத்த நவராத்திரி பந்தல் சர்ச்சையாகி உள்ளது. நவராத்திரி பூஜை கொண்டாட்டங்கள், மேற்கு வங்க மாநிலத்தின் கலாசார அடையாளம். அதுவும் நவராத்திரி பந்தல்கள் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருக்கும். இத்தகைய நவராத்திரி பந்தல்களில் ஒன்றை இந்துமகாசபை அமைத்திருந்தது.

மகிஷாசுரனாக காந்தியார்
இந்து மகாசபையின் நவராத்திரி பந்தலில், துர்க்கை அம்மனால் வதம் செய்யப்படுகிற மகிஷாசுரனாக மகாத்மா காந்தி சித்தரிக்கப்பட்டிருந்தார். மகாத்மா காந்தியை எருமைத் தலை கொண்ட மகிஷாசுரன் போல இந்து மகாசபை சித்தரித்திருந்தனர். இது தொடர்பான பட்ங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையானது.

மத்திய அரசு அதிரடி
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு இதில் தலையிட்டது. கொல்கத்தாவில் நவராத்திரி பந்தலில் மகாத்மா காந்தியை விமர்சித்து வைக்கப்பட்டிருந்த மகிஷாசுரன் உருவம், அகற்றப்பட்டது. இருந்த போதும் இது தொடர்பாக கருத்து தெரிவித்த இந்து மகாசபையினர், மகாத்மா காந்தி மீதான எங்கள் விமர்சனங்கள் சரிதான். அதனால்தான் அப்படி செய்திருந்தோம். ஆனால் மத்திய அரசு கேட்டுக் கொண்டதால் அதை அகற்றினோம் என்கின்றனர். இந்து மகாசபையின் இந்த அட்டூழியத்துக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications