100 நாள் வேலை வாய்ப்பு திட்டம்.. 150 நாள்களாக மாற்றம்!
கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள்கள் வழங்குப்பட்டு வந்த வேலைவாய்ப்பு தற்போது 150 -ஆக உயர்த்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள்கள் வழங்கப்படும் வேலைவாய்ப்பை 150 நாள்களாக மாற்ற மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் அரசால் தொடங்கப்பட்ட 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் மூலம் தற்போது தினமும் 18 லட்சம் பேர் பயனடைந்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் கிணறு வெட்டுதல், ஆறு, குளம் வெட்டுதல், தூர் வாரும் பணி உள்ளிட்ட பணிகளில் கிராமமக்கள் ஈடுபடுகின்றனர். இதற்கென அவர்களுக்கு பிரத்யேக அடையாள அட்டையும் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் கிராம மக்களின் வாழ்வாதாரத்துக்கு துணையாக உள்ள 100 நாள் வேலை திட்டத்தை 150 நாள்களாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது. அதன்படி 150 நாள்களாக மாற்றுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் 1 கோடியே 23 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெறுவர்.












Click it and Unblock the Notifications