மும்பை பரேல் பகுதியில் கிறிஸ்டல் டவர் அடுக்குமாடி கட்டடத்தில் பயங்கர தீ விபத்து.. 4 பேர் பலி
மும்பையின் பரேல் பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவரின் 12 வது மாடியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
Recommended Video

மும்பை: மும்பையின் பரேல் பகுதியில் உள்ள கிரிஸ்டல் டவரின் 12 வது மாடியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
மும்பை பரேல் பகுதியில் ஹின்ட்மதா திரையரங்கம் அருகே உள்ள கிரிஸ்டல் டவர் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை பெரும் தீவிபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து 14 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி கட்டுப்படுத்தினர். ஆனால், தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் குடியிருப்பிற்குள் சிக்கியவர்களை பெரும் சிரமப்பட்டு தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
கிரேன் மூலம் அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் சிக்கியவர்கள் மீட்கப்பட்டனர். இதில் படுகாயங்களுடன் 20 பேர் அருகில் உள்ள கெம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஒருவர் பெண் ஆவார். அடுக்குமாடிக் குடியிருப்பின் 12 ஆவது மாடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும், தீவிபத்து ஏற்பட்ட கட்டடம் பாதுகாப்பற்றது என அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அடுக்குமாடி கட்டடத்திற்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் ஆகியவை துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 13ஆம் தேதி இதே பகுதியில் உள்ள குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கமலா மில்ஸ் பப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications