"மேட் இன் சீனா" யு.எஸ்.பி.யில் கொடுக்கப்பட்ட "மேக் இன் இந்தியா" பிரவுச்சர்
டெல்லி: மோடி அரசின் "மேக் இன் இந்தியா" பிரசாரம் குறித்த மின்னணு பிரவுச்சரை சீனாவில் தயாரிக்கப்பட்ட "மேட் இன் சீனா" யு.எஸ்.பி மூலம் விநியோகித்திருப்பது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
அனைத்து பொருட்களையும் இந்தியாவிலே தயாரிக்க வேண்டும்; இந்திய பொருட்களை வெளிநாடுகளுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மேக் இன் இந்தியா என்ற பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த தொடக்க விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டின் முன்னணி தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வு குறித்து கலந்து கொண்ட அனைவரும் அறிந்து கொள்வதற்காக யு.எஸ்.பி. டிரைவில் பிரவுச்சர் இணைத்து தரப்பட்டது.

மேட் இன் சீனா யு.எஸ்.பி.
ஆனால் அந்த யு.எஸ்.பி. டிரைவில் "மேட் இன் சீனா" என்று போடப்பட்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

சீனாவில் இருந்து 65% பொருட்கள்
இந்தியாவைப் பொறுத்தவரையில் 65% எலக்ட்ரானிக் பொருட்கள் சீனாவில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது.

எலக்ட்ரானிக் தயாரிப்பை கைவிட்ட இந்தியா
இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு முன்பே எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பை கைவிட்டுவிட்டது இந்தியா. அப்போது சீனா, ஜப்பான், கொரியா, தைவான் ஆகியவை இந்த துறையில் கொடி கட்டிப் பறந்ததால் இந்திய தொழில்துறை இதனை கைவிட்டுவிட்டது.

120 மில்லியன் டாலர் இறக்குமதி
தற்போது 38.46 மில்லியன் டாலர் மதிப்பிலான யு.எஸ்.பி. டிரைவ்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்கிறோம். ஒட்டுமொத்தமாக 120 மில்லியன் டாலர் மதிப்புக்கு யு.எஸ்.பி. டிரைவ்கள் இறக்குமதி செய்துள்ளோம்.

39 மில்லியன் டாலர் ஏற்றுமதி
அதே நேரத்தில் 39 மில்லியன் டாலர் மதிப்பிலான யு.எஸ்.பி. டிரைவ்களை நாம் ஏற்றுமதியும் செய்திருக்கிறோம். இது குறிப்பாக பிரான்ஸ் நாட்டுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications