அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது விஹெச்பியின் லட்சியம்: பிரவீன் தொகாடியா
மும்பை: என்ன விலை கொடுத்தாவது, அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோயில் கட்டுவதுதான் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் முக்கிய குறிக்கோள் என்று அவ்வமைப்பின் தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்தார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற கிருஷ்ணர் ஜெயந்தி மற்றும், விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு தொடங்கப்பட்ட பொன்விழா ஆண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்க ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன்பக்வத் வந்திருந்தார். அவர் கூறுகையில் "ஹிந்துஸ்தான் என்பது இந்துக்களின் தேசம். நமது நாட்டின் அடையாளம் ஹிந்துத்துவா.

இந்துத்துவா என்பது, பிற மதங்களையும் தன் மதத்தைப்போல் நினைத்து இணைத்துக்கொள்ளும் வாழ்வியல் வழிமுறை. ஜாதி பேதமற்று சமத்துவமாக இந்துக்கள் வாழ வழி செய்வதே அடுத்த ஐந்தாண்டுகளில் விசுவ ஹிந்து பரிஷத் செய்ய வேண்டிய முக்கிய பணியாகும். இந்த பணியில் ஆர்எஸ்எஸ்சும் தன்னை இணைத்துக்கொள்ளும். இந்துக்கள் அனைவரும் பாகுபாடு இன்றி, ஒரே இடத்தில் நீர் அருந்த வேண்டும், ஒரே இடத்தில் வழிபாடு நடத்த வேண்டும். ஜாதிக்கொரு சுடுகாடு இருக்க கூடாது. இந்துக்களில் அவர்கள் யாராக இருந்தாலும் இறந்த பிறகு ஒரே சுடுகாட்டில்தான் தகனம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற விசுவ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவீன் தொகாடியாவிடம் அயோத்தி ராமர் கோயில் நிலைப்பாடு குறித்து கருத்து தெரிவிக்குமாறு நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் அளித்த பதிலில் "அயோத்தியில் என்ன விலை கொடுத்தாவது பிரமாண்டமான ராமர் கோயில் கட்டுவது விஹெச்பியின் குறிக்கோள். ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும்வரை எங்களது நோக்கம் இதுவாகத்தான் இருக்கும்.
அமைதி ஒப்பந்தத்தை மீறி, எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்களை நடத்திவருகிறது. தாவூத் இப்ராஹிம், ஹபீஸ் சையீத், மொசூத் அசார் ஆகிய தீவிரவாதிகளை இந்தியாவிடம், பாகிஸ்தான் ஒப்படைக்கும்வரை அந்த நாடு அமைதியை விரும்புவதாக எடுத்துக்கொள்ள முடியாது என்றார்.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications