மாலேகான் வழக்கில் அரசு வழக்கறிஞர் நீக்கத்துக்கு எதிர்ப்பு- மத்திய அரசு, என்.ஐ.ஏ.வுக்கு நோட்டீஸ்!!
டெல்லி: இந்துத்துவா தீவிரவாதிகள் நிகழ்த்திய மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தேசிய புலனாய்வு ஏஜென்சியின் வழக்கறிஞர் ரோஹினி சாலியன் நீக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோடீஸ் அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மாலேகானில் 2008-ல் நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் பலியாயினர். இந்த குண்டுவெடிப்புக்கு காரணமாக இருந்ததாக சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்ட இந்துத்துவா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவ்வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் என்.ஐ.ஏ. சார்பாக ரோஹினி சாலியன் அரசு வழக்கறிஞராக ஆஜராகி வந்தார்.

இதனிடையே சில மாதங்களுக்கு முன்னர், மத்தியில் பாரதிய ஜனதா அரசு பொறுப்பேற்றதும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக மென்மையான போக்கை கடைப்பிடிக்குமாறு என்.ஐ.ஏ. அதிகாரி ஒருவர் தமக்கு உத்தரவிட்டதாக அரசு வழக்கறிஞர் ரோஹினி சாலியன் குற்றம்சாட்டினார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்குகளில் ஆஜரான ரோஹினி சாலியனை என்.ஐ.ஏ. நீக்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதையடுத்து மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கை நேர்மையாக நடத்த வேண்டும்; இதில் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டும் எனக் கோரி ஹர்ஸ் மந்தர் என்பவர் பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இம்மனு கடந்த சில நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்காக தாம் வாதாடி இருப்பதால் இம் மனுவை விசாரிக்கும் பெஞ்சில் தாம் இடம்பெறவில்லை என நீதிபதி யு.யு. லலித் கூறினார்.
இதனைத் தொடர்ந்து புதிய பெஞ்சை தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து நியமித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று இப்பொதுநல மனு மீது விசாரணை நடைபெற்றது. அப்போது இந்த மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
-
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications