மலேகான் வழக்கு விசாரணை தொடர்பான மனுவை விசாரிக்க நீதிபதி யூ.யூ. லலித் மறுப்பு!
டெல்லி: இந்துத்துவா தீவிரவாதிகள் நிகழ்த்திய மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்ற பெஞ்சில் இருந்து தாம் விலகுவதாக நீதிபதி யூ.யூ. லலித் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மலேகானில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ந் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 7 பேர் பலியாகினர்.

முதலில் இந்த சம்பவத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்திய மகாராஷ்டிரா சிறப்பு புலனாய்வு அமைப்பினர், இந்த சம்பவத்துக்கு இந்துத்துவா தீவிரவாதிகளே காரணம் என கண்டறிந்தனர்.
இந்த நிலையில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் தம்மை இந்த வழக்கில் மென்மையான போக்கைக் கடைபிடிக்குமாறு நெருக்கடி கொடுத்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் ரோஹினி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. சமூக ஆர்வலர் ஹர்ஸ் மந்தர் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த பொதுநலன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கலிபுல்லா தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த பெஞ்ச்சில் இடம்பெற்றிருந்த நீதிபதி யூ.யூ. லலித், தாம் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இம்மனுவை விசாரிப்பதற்கான புதிய பெஞ்சை நியமிக்க தலைமை நீபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications