மலேகான் வழக்கு விசாரணை தொடர்பான மனுவை விசாரிக்க நீதிபதி யூ.யூ. லலித் மறுப்பு!
டெல்லி: இந்துத்துவா தீவிரவாதிகள் நிகழ்த்திய மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநலன் மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்ற பெஞ்சில் இருந்து தாம் விலகுவதாக நீதிபதி யூ.யூ. லலித் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மலேகானில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ந் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 7 பேர் பலியாகினர்.

முதலில் இந்த சம்பவத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்திய மகாராஷ்டிரா சிறப்பு புலனாய்வு அமைப்பினர், இந்த சம்பவத்துக்கு இந்துத்துவா தீவிரவாதிகளே காரணம் என கண்டறிந்தனர்.
இந்த நிலையில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் தம்மை இந்த வழக்கில் மென்மையான போக்கைக் கடைபிடிக்குமாறு நெருக்கடி கொடுத்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் ரோஹினி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து மலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. சமூக ஆர்வலர் ஹர்ஸ் மந்தர் என்பவர் இந்த மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த பொதுநலன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி கலிபுல்லா தலைமையிலான பெஞ்ச் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த பெஞ்ச்சில் இடம்பெற்றிருந்த நீதிபதி யூ.யூ. லலித், தாம் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இம்மனுவை விசாரிப்பதற்கான புதிய பெஞ்சை நியமிக்க தலைமை நீபதிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications