மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட சாத்வி.. பாஜகவில் இணைந்தார்.. போபாலில் போட்டி!
மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிரக்யா தாக்குர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
போபால்: மலேகான் குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சாத்வி பிரக்யா தாக்குர் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார். இவர் போபாலில் பாஜக சார்பாக போட்டியிட இருக்கிறார் என்கிறார்கள்.
செப்டம்பர் 29, 2008ல் மும்பையில் இருந்து 270 கிமீ தொலைவில் இருக்கும் மலேகான் பகுதியில் இரண்டு பைக்குகளில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்தது. இந்த மோசமான சம்பவத்தில் 7 பேர் பலியானார்கள்.
இந்த குண்டுவெடிப்பை காங்கிரஸ் கட்சி காவி தீவிரவாதம் என்று குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த குண்டுவெடிப்பில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்குத்தான் தற்போது பாஜக வாய்ப்பளிக்க உள்ளது.

என்ன பிரச்சனை
இதில் குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குகளை சந்தித்து வரும் ஒருவர்தான் சாத்வி பிரக்யா தாக்குர். அடிப்படை வாத கருத்து கொண்டு இவர் இதற்கு முன் பல வழக்குகளில் சிக்கி இருக்கிறார். அதேபோல் தொடர்ச்சியாக இஸ்லாமியர்களுக்கு எதிராக கடுமையான சர்ச்சைக்கு உரிய கருத்துக்களை நிறைய சொல்லி இருக்கிறார்.

பாஜக இணைப்பு
இந்த நிலையில் தற்போது இவர் பாஜகவில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா முன்னிலையில் இவர் பாஜகவில் இணைந்தார். தற்போது இவர் தேர்தலிலும் நிற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் கட்சி
வரும் லோக்சபா தேர்தலில் இவர் காங்கிரஸ் மூத்த உறுப்பினர் திக் விஜய் சிங்கை எதிர்த்து போட்டியிட இருக்கிறார். போபால் தொகுதியில் இவர் களமிறங்குவார் என்று கூறுகிறார்கள். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

சாத்வி பிரக்யா தாக்குர்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சாத்வி பிரக்யா தாக்குர், நான் கண்டிப்பாக தேர்தலில் வெற்றிபெறுவேன். எனக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் தேர்தலில் வெற்றிபெறுவது உறுதியாகிவிட்டது. எனக்கு எதிரான வழக்குகளையும் நான் எளிதாக எதிர்கொள்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications