'அறிவிக்கப்பட்ட குற்றவாளி'.. கோர்ட் உத்தரவு! மல்லையாவுக்கு நெருக்கடி அதிகரிப்பு
மும்பை: தொழிலதிபர் விஜய் மல்லையாவை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக மும்பையிலுள்ள சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று தற்போது இங்கிலாந்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்திவருகிறார் தொழிலதிபர் விஜய் மல்லையா.
பல முறை சம்மன் அனுப்பியும் கோர்ட் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், ரூ.1411 கோடி மதிப்புள்ள மல்லையாவின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி சமீபத்தில் அறிவித்தது.

இதனால் ஷாக்-ஆன மல்லையா, சொத்துக்களை மடக்கினால் நான் எப்படி பணத்தை திருப்பி தர முடியும். அது பணத்தை திரட்டுவதில் சிக்கலை அதிகரித்துவிடும் என்று கூறியிருந்தார்.
ஆனால், அமலாக்கத்துறை நடவடிக்கையை முன்கூட்டியே கணித்து, குடகிலுள்ள சொத்துக்களை அவசரமாக அவர் விற்பனை செய்துவிட்டார். இதேபோன்ற விற்பனை நடவடிக்கையை மல்லையா மேற்கொண்டு லண்டனிலேயே செட்டிலாக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மும்பையிலுள்ள சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றம், மல்லையாவை, அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று இன்று அறிவித்துள்ளது. அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவை கோர்ட் பிறப்பித்தது. இதன்மூலம், அவரை எங்கு வைத்து வேண்டுமானாலும் கைது செய்ய காவல்துறைக்கு முழு சுதந்திரம் கிடைத்துள்ளது.
கோர்ட் உத்தரவை காரணம் காட்டி, இங்கிலாந்தில் இருந்து மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட கோர உள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் 'ஒன்இந்தியாவிடம்' தெரிவித்தன.
மல்லையா தனது சொத்துக்களை விற்பனை செய்வதும் கோர்ட் உத்தரவு மூலம், தடுக்கப்பட்டுள்ளது. மல்லையா மீது நெருக்கடி அதிகரித்துக்கொண்டே செல்வதால் அவர் மும்பையில் நடைபெறும் விசாரணைக்கு ஆஜராக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications