பெண் ஆளும் மாநிலத்தில் பாலியல் குற்றங்களா... அவமானம்: மம்தாவுக்கு காங்கிரஸ் கண்டனம்

மேற்கு வங்க மாநிலம் பிர்ப்ஹம் மாவட்டத்தில் சபல்பூல் கிராமத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் உயர்சாதி வாலிபரை காதலித்ததற்காக, அந்த ஊர் பஞ்சாயத்தாரின் தீர்ப்பின் படி 13 பேர் அப்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
நடந்த கொடுமைகள் குறித்து போலீசாரிடம் அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட 13 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கடந்த டிசம்பரில் மாநிலத்தில் 16 வயது சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். அதனைத் தொடர்ந்து போலீசில் புகார் கொடுத்ததற்காக மீண்டும் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டார். இதில் அப்பெண் கடந்த டிசம்பர் 31ந்தேதி பலியானார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 பெண்கள் கொல்கத்தாவில் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தபட்டதாக புகார் பதிவாகியுள்ளது.
இந்நிலையில், இது குறித்து மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ப்ரதீப் பட்டாச்சாரியா கண்டனம் தெரிவித்து உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, ‘மாநிலத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. ஒரு பெண் முதல்வராக உள்ள நிலையிலும்இது போன்று பலாத்கார சம்பவங்கள் நடைபெறுவது வருந்தத்தக்கது. தன்னை முதல்வர் என மமதா பானர்ஜி கூறி கொள்கிறார். இது நாம் அவமானப்பட வேண்டிய விவகாரம்' எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், இது போன்ற சம்பவங்களில் மாநில அரசு முறையாக நடவடிக்கைகள் மேற்கொள்கிறதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications