Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாபெரும் பேரணி.. நந்திகிராமில் கெத்தாக வேட்புமனு தாக்கல் செய்த மம்தா.. சமாளிப்பாரா சுவேந்து அதிகாரி?

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராம் சட்டசபை தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைத் தொடர வேண்டும் என்ற முனைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் களமிறங்குகிறது.

Mamata Banerjee Files Nomination From Nandigram Assembly Seat

அதேநேரம் தற்போது மாநிலத்தில் உள்ள அதிருப்தி வாக்குகளின் உதவியுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜக தீவிரமாக தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது,

கடந்த சில மாதங்களுக்கு முன் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுவேந்து அதிகாரி, உள் துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இது வங்கத்தின் தெற்கு மாவட்டங்களில் தங்கள் வாக்கு வங்கியை அதிகரிக்கும் என பாஜக தெரிவித்துள்ளது.

மேலும், தனது நந்திகிராம் சட்டசபை தொகுதியில் மம்தா பான்ர்ஜியால் போட்டியிட முடியுமா என்றும் சுவேந்து அதிகாரி சவால் விடுத்திருந்தார், இந்த சவாலை ஏற்ற மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், இன்று நூற்றுக்கணக்கான மக்களுடன் சுமார் இரண்டு கிலோமீட்டருக்கு பேரணியாக வந்த மம்தா பானர்ஜி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஒரு காலத்தில் மம்தா பானர்ஜியின் வலது கரமாக திகழந்த சுவேந்து அதிகாரியை எதிர்த்து தீவிர பிரசாரத்தை வரும் காலங்களில் மம்தா பானர்ஜி மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+