உச்சநீதிமன்ற உத்தரவு எதிரொலி.. சிபிஐக்கு எதிராக நடத்திய தர்ணாவை கைவிட்டார் மமதா பானர்ஜி
Recommended Video

கொல்கத்தா: சிபிஐ தொடர்ந்த வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வெளியான நிலையில் தர்ணா போராட்டத்தை கைவிட்டுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டுக்கு வந்தனர். எனினும் அவர் கைது செய்யப்படவில்லை. மாறாக சிபிஐ அதிகாரிகள் 15 பேரை கொல்கத்தா போலீஸார் கைது செய்தனர்.

மாநில அரசின் அனுமதி இல்லாமல் கமிஷனரை கைது செய்ய சிபிஐ வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணைக்கு கொல்கத்தா கமிஷனர் ஒத்துழைப்பு தர வேண்டும் என உத்தரவிட கோரும் வழக்கில் சிபிஐ முன் ராஜீவ் குமார் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
எனினும் ராஜீவ் குமாரை கைது செய்யக் கூடாது என சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து மம்தா கூறுகையில் இது தார்மீக வெற்றி. சுப்ரீம் கோர்ட் ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வரும் 8-ஆம் தேதி வரை தர்ணா தொடரும் என மம்தா கூறியிருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் சாதகமான தீர்ப்பால் தர்ணா போராட்டத்தை கைவிடுவதா வேண்டாமா என்பது குறித்து இன்று தன்னை சந்திக்க வந்துள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் ஆலோசனை நடத்தினார் மமதா. அதில், போராட்டத்தை கைவிட முடிவு எட்டப்பட்டது. இதையடுத்து மாலை 6.15 மணியளவில், தான் போராட்டத்தை கைவிடுவதாக மமதா அறிவித்தார். நீதிமன்றங்கள் எங்களுக்கு சாதகமான உத்தரவை தந்துள்ளதால் போராட்டத்தை கைவிடுகிறேன் என்று மமதா அப்போது அறிவித்தார். இதையடுத்து மேற்கு வங்க மாநிலத்தில் நிலவிய பதற்ற சூழ்நிலை முடிவுக்கு வந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications