பாலமுரளி கிருஷ்ணா மறைவு: மம்தா பானர்ஜி, ராகுல், வெங்கையா நாயுடு உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
இசை கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு திரையுலகினர் தலைவர்கள் இரங்கள் தெரிவித்துள்னர்.
டெல்லி: பிரபல இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரபல இசை மாமேதை பாலமுரளி கிருஷ்ணா உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 86. இந்நிலையில், அவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "இந்தியா உண்மையான இசை ஜாம்பவானை இழந்துள்ளது. மூத்த கர்நாடக இசை கலைஞரின் இசை என்றென்றும் நீடித்து இருக்கும். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், "மாமேதை மங்கலபள்ளி பாலமுரளி கிருஷ்ணா மறைவு என்னை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக சங்கீதம் ஒரு முன்னணி இசைமேதையை இழந்துள்ளது. என்னுடைய ஆழ்ந்த இரங்கல்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications