For Daily Alerts
Just In
மோடியால் பூஜைக்கு ஸ்வீட் வாங்க காசு இல்லாமல் கடன் வாங்கினேன்: மமதா பானர்ஜி
ஹூக்ளி: மோடியின் நடவடிக்கையால் ஜகதாத்ரி பூஜைக்கு இனிப்பு வாங்க காசு இல்லாமல் கடன் வாங்கியதாக மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜி ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சந்தர்நாகூரில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
இந்தியர்கள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கறுப்பு பணத்தை கொண்டு வர முடியாத பாஜக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதித்து கவனத்தை திசை திருப்புகிறது.
மோடியின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி. ஜகதாத்ரி பூஜைக்கு இனிப்பு வாங்கக் கூட பணம் இல்லாமல் கடன் வாங்கினேன் என்றார்.
மோடியின் நடவடிக்கை பற்றி மமதா பெங்காளி மொழியில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
West Bengal CM Mamata Banerjee said that she borrowed money to buy sweets for Jagadhatri puja because of Modi's masterstroke.
Story first published: Saturday, November 12, 2016, 17:44 [IST]