For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாத்ரூமில் “கேமரா” – பெண்களை படமெடுத்த ஹோட்டல் கண்காணிப்பாளர் கைது!

Google Oneindia Tamil News

பெங்களூர்: பெங்களூர் ஹோட்டல் ஒன்றில் பெண்கள் பாத்ரூமில் ரகசியமாக கேமரா வைத்து புகைப்படம் எடுத்து, ரசித்து வந்த ஹோட்டல் கண்காணிப்பாளர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Man arrested for take photos of ladies in hotel illegally…

பெங்களூர், பி.டி.எம் லே-அவுட் அவுட்டர் ரிங் ரோடு, உடுப்பி கார்டன் சர்க்கிள், பகுதியிலுள்ள பிரபல ரெஸ்டாரண்ட்டில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் மாதேஷா. 30 வயதானவர். இவரது சொந்த ஊர் சாம்ராஜ் நகர்.

இவர் தான் பணிபுரிந்து வந்த அந்த ஹோட்டலில் பெண்கள் பாத்ரூமில், ரகசியமாக செல்போனை வைத்து பெண்களை படம் பிடித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஹோட்டலுக்கு வந்த பெண் ஒருவர் பாத்ரூமுக்கு சென்ற போது அங்கு செல்போன் ஆன் செய்து வைத்திருப்பதை பார்த்து தன் கணவரிடம் கூறியுள்ளார்.

அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஹோட்டலுக்கு வந்து சோதனையிட்டனர். அதற்குள், செல்போனில் இருந்த படங்களை மாதேஷ் அழித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாதேஷாவை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பிடிஎம் லேஅவுட் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Hotel supervisor fixed camera in bathroom and take picture of ladies illegally. Police arrested him and filed case about this activity.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X