நடத்தையில் சந்தேகம்: மனைவியை கரிச்சட்டியால் அடித்துக் கொன்ற கணவர்
டெல்லி: டெல்லியில் மனைவி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்த கணவர் அவரை கரிச்சட்டியால் அடித்துக் கொலை செய்து உடலை கட்டிலில் உள்ள பெட்டியில் மறைத்து வைத்துவிட்டார்.
தெற்கு டெல்லியில் உள்ள மால்வியா நகரைச் சேர்ந்தவர் ஷராபத்(33). அவரது மனைவி கவிதா(32). 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கவிதாவுக்கு கள்ளத் தொடர்பு இருக்குமோ என்று ஷராபத்துக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலையும் தகராறு ஏற்பட்டபோது ஷராபத் சமையல் செய்யும் கரிச்சட்டியை எடுத்து கவிதாவின் தலையில் திரும்பத் திரும்ப அடித்தார். இதில் படுகாயம் அடைந்த கவிதா உயிர் இழந்தார். இதையடுத்து ஷராபாத் கவிதாவின் உடலை பெட்ஷீட்டுகளில் சுற்றில் கட்டிலில் இருக்கும் பெட்டிக்குள் வைத்தார்.
பின்னர் குழந்தைகளை அழைத்துக் கொண்டு புலந்த்ஷாஹரில் உள்ள தனது மாமா வீட்டிற்கு சென்றார். இரவு 7.30 மணி அளவில் அவரின் மாமா போலீசாருக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் ஷராபத்தை புதன்கிழமை கைது செய்தனர்.
அவரது வீட்டில் இருந்து கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications