பல அடுக்கு போலீஸ் பாதுகாப்பை மீறி.. இரவில் நைசாக முதல்வர் வீட்டிற்குள் புகுந்த நபர்! திடுக் சம்பவம்
கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் வீட்டில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் செய்த காரியம் பகீர் கிளப்புவதாக உள்ளது.
மேற்கு வங்கத்தில் இப்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசு ஆட்சியில் உள்ளது. அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் வேலையில் மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார்.
இந்தச் சூழலில் தெற்கு கொல்கத்தாவில் உள்ள மம்தா பானர்ஜி வீட்டில் நடந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

முதல்வர் இல்லம்
தெற்கு கொல்கத்தாவில் டோலியின் நுல்லா எனப்படும் கங்கையின் பழைய கால்வாயை ஒட்டி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் வீடு அமைந்துள்ளது. முதல்வரின் வீடு என்பதால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். ஒருபுறம் கால்வாய் இருக்கும் போதிலும், அதற்கு அந்த பக்கமும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும். மம்தாவுக்கு z பிரிவு பாதுகாப்பு உள்ளதால், வீட்டிற்கும் கடும் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மர்ம நபர்
இருப்பினும், அத்தனை போலீஸ் பாதுகாப்பையும் தாண்டி இளைஞர் ஒருவர் மம்தா வீட்டில் நுழைந்துள்ளார். சனிக்கிழமை இரவு நேரத்தில் வீட்டில் நுழைந்த அந்த மர்ம நபர், இரவு முழுவதும் அங்கேயே பதுங்கி உள்ளார். ஞாயிற்றுக்கிழமை காலையில் தான் அந்த இளைஞர் பதுங்கி இருப்பது கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். அந்த இளைஞர் யார், அவரது பெயர், வயது உட்பட எந்தவொரு தகவலையும் போலீசார் வெளியிடவில்லை.

எப்படி வந்தார்
இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரி கூறுகையில், "இந்தச் சம்பவம் எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. கால்வாயின் மறுபுறத்தில் கூட 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு இருக்கும்.. அவர்களை எல்லாம் தாண்டி அந்த நபர் எப்படி உள்ளே வந்தார் எனத் தெரியவில்லை. இது குறித்து விசாரித்து வருகிறோம். இந்தச் சம்பவம் பற்றி எங்களால் பேச முடியாது. இந்த விவகாரம் இப்போது உயர் அதிகாரிகளால் விசாரிக்கப்படு வருகிறது" என்று கூறினார்.

விசாரணை
இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் கிடைத்ததும் கொல்கத்தா போலீஸ் கமிஷனர் வினீத் கோயல், மம்தா பானர்ஜியின் வீட்டிற்கு விரைந்தார். இது குறித்து கொல்கத்தா காவல்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், முதல்வர் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டு உள்ளது.

கொல்கத்தா போலீசார்
கொல்கத்தா போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒரு நபர் எப்படியோ முதல்வர் குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்துவிட்டார். அவரை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். இதையடுத்து அவர் காளிகாட் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். முதலமைச்சர் பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்கத் துறையினர் இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. முதல்வர் இல்லம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications