ஹைதராபாத்தில் வினோத தண்டனையால் பரிதாபமாக பலியான 40 வயது நபர்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் 40 வயது நபர் ஒருவர் சாலையில் காரில் செல்கையில் மற்றொரு கார் மீது லேசாக மோதியதையடுத்து அவருக்கு அளிக்கப்பட்ட வினோத தண்டனையால் அவர் உயிர் இழந்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த 40 வயது நபர் ஒருவர் பவன்பாலி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை காரில் சென்றுள்ளார். அப்போது அவரது கார் மற்றொரு காரை லேசாக இடித்துவிட்டது.

Man dies after doing sit-ups as punishment in Hyderabad

இதையடுத்து இடிவாங்கிய காரில் இருந்து இறங்கிய 4 பேர் அந்த 40 வயது நபரை சிட்அப்ஸ்(உட்காரந்து உட்கார்ந்து எழுவது) செய்யுமாறு கூறியுள்ளனர். அவரும் வேறு வழியில்லாமல் சிட்அப்ஸ் செய்துள்ளார். தொடர்ந்து சிட்அப்ஸ் செய்கையில் அவர் உயிர் இழந்துவிட்டார்.

இதை பார்த்த அந்த 4 பேரும் அவரின் பர்ஸை எடுத்துக் கொண்டு அவரது உடலை அவரது காரில் போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர். முதலில் காரில் அவர் இறந்து கிடந்ததை பார்த்த மக்கள் அவர் வெயிலின் கொடுமையால் இறந்துவிட்டதாக நினைத்தனர்.

அதன் பிறகு போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானவற்றை பரிசோதனை செய்தபோது தான் உண்மை தெரிய வந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். நான்காவது நபரை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+