மனைவியைக் கொன்று கணவர் தானும் தற்கொலை... மும்பையில் குழந்தைகள் கண் முன் கொடூரம்!
மும்பை: மும்பையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் குழந்தைகள் கண் முன்னே மனைவியைக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை ஜோகேஸ்வரி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ் ஜாதவ் (35). இவரது மனைவி பெயர் அமரபலி. இத்தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் என மொத்தம் மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களில் மூத்த குழந்தைக்கு வயது மூன்று தான் ஆகிறது.

இந்நிலையில், நேற்று மாலை ராஜேஷூக்கும் அவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜேஷ், தனது மனைவியை கொலை செய்தார். பின்னர் தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இந்த கொடூர சம்பவங்கள் அவர்களது மூன்று மைனர் குழந்தைகள் கண் முன்பே நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அக்கம்பக்கத்தார் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், இரண்டு சடலங்களையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
நடந்த சம்பவங்களுக்கு வேறு யாரும் காரணமில்லை என தற்கொலைக்கு முன்னர் ராஜேஷ் எழுதிய கடைசிக் கடிதத்தைப் போலீசார் மீட்டுள்ளனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications