தனக்கு பிடித்த வேட்பாளருக்கு ஓட்டு போடாத மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர்
பாட்னா: பீகாரில் தனக்கு விருப்பமான வேட்பாளருக்கு வாக்களிக்காத மனைவியை கணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் உள்ள ஏழு நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது. உஜ்ஜார்புர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சமஸ்திபூர் மாவட்டம், மொகியுத்தீன்நகர் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத் பாஸ்வான். அவரும், அவரது மனைவியும் இன்று வாக்களித்தனர்.
அதில் அவரது மனைவி அவருக்கு பிடித்த வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லையாம். இதனால் ஆத்திரம் அடைந்த பாஸ்வான் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த பெண் உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது நிலைமை மோசமடைந்ததால் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதற்கிடையே இந்த சம்பம் பற்றி வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள பாஸ்வானை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications