For Daily Alerts
Just In
டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் இளைஞர் தன்னைத்தானே சுட்டு தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு
டெல்லி: டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் இளைஞர் தன்னைத்தானே சுட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பயங்கரவாத அச்சுறுத்தலை அடுத்து நவராத்திரி பண்டிகை தொடங்க உள்ளதை அடுத்து டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பையும் மீறி 22 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கி உடன் வந்துள்ளார்.
பரபரப்பான ராஜீவ் சவுக் ரயில் நிலையத்தில் அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டிருக்கிறார்....தற்போதும் மிகவும் ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
Comments
English summary
22-year-old man shot himself inside the Rajiv Chowk station of Delhi Metro on Thursday evening even after security check was done.