பெங்களூரில் போதை மருந்து கலந்த கூல்ட்ரிங்ஸ் கொடுத்து 14 வயது சிறுமி பலாத்காரம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு குளிர்பானத்தில் போதை மருந்தை கலந்து கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூர் சிக்க பானஸ்வாடியில் உள்ள ஏ.கே. காலனியில் வசித்து வருபவர் சோமசேகர் என்ற சோமா(20). கூலி வேலை செய்பவர். அவர் அப்பகுதியில் வசித்து வரும் 10ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை தன் வசப்படுத்த கடந்த சில மாதங்களாக முயற்சி செய்துள்ளார். அந்த சிறுமியின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சிறுமியின் தாய் வீட்டு வேலை செய்து அவரை படிக்க வைக்கிறார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சிறுமியின் தாய் வேலைக்கு சென்றுள்ளார். வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது சோமா அங்கு சென்று அவருக்கு போதை மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்துள்ளார். குளிர்பானத்தை குடித்த சிறுமிக்கு போதை ஏறியதும் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் சோமா. இரவு 9 மணிக்கு வீட்டுக்கு வந்த தனது தாயிடம் நடந்தவற்றை சிறுமி தெரிவித்தார்.

சிறுமியின் தாய் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சோமாவை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+