அத்வானியை கைது செய்தவருக்கு தனி பொறுப்புடன் கூடிய அமைச்சர் பதவி கொடுத்த மோடி
அத்வானியை கைது செய்த அதிகாரிக்கு தனி பொறுப்புடன் கூடிய மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
Recommended Video

டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானியை கைது செய்தவருக்கு மத்திய அமைச்சர் பதவியை பிரதமர் மோடி கொடுத்திருப்பது புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.
மத்திய அமைச்சரவை நேற்று மாற்றிய அமைக்கப்பட்டது. இணை அமைச்சர்கள் 4 பேர் கேபினட் அமைச்சர்களாக்கப்பட்டனர். 9 பேர் இணை அமைச்சர்களாகினர்.
இதில் முன்னாள் மத்திய உள்துறை செயலர் ராஜ்குமார் சிங்கும் ஒருவர். மின்சாரம் மற்றும் புதுபிக்கக் கூடிய வளங்கள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்வானி கைது
1990-ம் ஆண்டு அத்வானி அயோத்தி நோக்கி ரதயாத்திரை நடத்திய போது பீகார் மாநிலம் சாமஸ்திபுர் ஆட்சியராக இருந்தார் ராஜ்குமார் சிங். அப்போது பீகார் முதல்வராக இருந்த லாலுபிரசாத் யாதவ் உத்தரவுப்படி அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து அவரை கைது செய்தவர் ராஜ்குமார் சிங்.

உள்துறை செயலர்
இதே ராஜ்குமார்சிங், 1999-2004 ஆம் ஆண்டில் அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த போது அத்துறையில் கூடுதல் செயலரானார். காங்கிரஸ் ஆட்சியில் 2011-13ல் உள்துறை செயலாளரானார்.

மத்திய அமைச்சர்
ஓய்வு பெற்ற பின்னர் பாஜகவில் இணைந்த ராஜ்குமார் பீகாரின் அர்ராக் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். இப்போது ராஜ்குமார் சிங்குக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

அத்வானியை வெறுப்பேற்ற?
கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் அத்வானி என்கிற ஆளுமை ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளது. அத்வானியை வெறுப்பேற்றத்தான் ராஜ்குமார் சிங்குக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications