அத்வானியை கைது செய்தவருக்கு தனி பொறுப்புடன் கூடிய அமைச்சர் பதவி கொடுத்த மோடி
அத்வானியை கைது செய்த அதிகாரிக்கு தனி பொறுப்புடன் கூடிய மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
Recommended Video

டெல்லி: பாஜக மூத்த தலைவர் அத்வானியை கைது செய்தவருக்கு மத்திய அமைச்சர் பதவியை பிரதமர் மோடி கொடுத்திருப்பது புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.
மத்திய அமைச்சரவை நேற்று மாற்றிய அமைக்கப்பட்டது. இணை அமைச்சர்கள் 4 பேர் கேபினட் அமைச்சர்களாக்கப்பட்டனர். 9 பேர் இணை அமைச்சர்களாகினர்.
இதில் முன்னாள் மத்திய உள்துறை செயலர் ராஜ்குமார் சிங்கும் ஒருவர். மின்சாரம் மற்றும் புதுபிக்கக் கூடிய வளங்கள் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்வானி கைது
1990-ம் ஆண்டு அத்வானி அயோத்தி நோக்கி ரதயாத்திரை நடத்திய போது பீகார் மாநிலம் சாமஸ்திபுர் ஆட்சியராக இருந்தார் ராஜ்குமார் சிங். அப்போது பீகார் முதல்வராக இருந்த லாலுபிரசாத் யாதவ் உத்தரவுப்படி அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து அவரை கைது செய்தவர் ராஜ்குமார் சிங்.

உள்துறை செயலர்
இதே ராஜ்குமார்சிங், 1999-2004 ஆம் ஆண்டில் அத்வானி உள்துறை அமைச்சராக இருந்த போது அத்துறையில் கூடுதல் செயலரானார். காங்கிரஸ் ஆட்சியில் 2011-13ல் உள்துறை செயலாளரானார்.

மத்திய அமைச்சர்
ஓய்வு பெற்ற பின்னர் பாஜகவில் இணைந்த ராஜ்குமார் பீகாரின் அர்ராக் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யானார். இப்போது ராஜ்குமார் சிங்குக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.

அத்வானியை வெறுப்பேற்ற?
கடந்த சில ஆண்டுகளாக பாஜகவில் அத்வானி என்கிற ஆளுமை ஒதுக்கியே வைக்கப்பட்டுள்ளது. அத்வானியை வெறுப்பேற்றத்தான் ராஜ்குமார் சிங்குக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications