மண்டியா மாவட்டத்தில்தான் வறட்சி அதிகமாம்.. இப்படி அறிக்கையளித்தால் எப்படி காவிரி தமிழகம் வரும்?
டெல்லி: காவிரி தொழில்நுட்ப குழு சுப்ரீம் கோர்ட்டில் அளித்த அறிக்கையில், தமிழகத்திற்கு எதிரான அம்சங்களே அதிகமாக இடம் பெற்றுள்ளன.
கர்நாடகா மற்றும் தமிழகத்திலுள்ள காவிரி பாசன பகுதிகளில் நீர் இருப்பு மற்றும் நீர் தேவையை ஆய்வு செய்ய, மத்திய நீர்வள கமிஷனர் சி.எஸ்.ஷா தலைமையில், காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது. இதில்,தமிழகம், கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் உயர் அதிகாரிகள் இடம் பெற்றனர்.

இரு மாநிலங்களிலும் இக்குழு ஆய்வு செய்து, சுப்ரீம்கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கை நகல், இரு மாநில வழக்கறிஞர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையிலேயே நாளை காவிரி வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது இரு மாநிலங்களும் வாதம் முன் வைக்கப்போகின்றன.
இதில் இரு மாநிலங்களிலுமே வறட்சி இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிடுவது கேள்விக்குறியாகியுள்ளது.
இதற்கு மாற்றாக, தமிழகம் புதிதாக ஏரி, குளங்களை வெட்டிக்கொள்ளலாம் என பரிந்துரை செய்து, விஷயத்தின் உடனடி வீரியம் தெரியாமல் அறிக்கை கொடுத்துள்ளதாக நிபுணர் குழு மீது தமிழக விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.
நிபுணர் குழு அறிக்கையில் கர்நாடகாவுக்கு சாதகமாக உள்ள அம்சங்களை பாருங்கள்..: கர்நாடகாவில், காவிரி பாசன பகுதியில் உள்ள 48 தாலுகாக்களில் 42 தாலுகாக்களை அம்மாநில அரசு வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்துள்ளது. அந்த அளவு அங்கு வறட்சி தாண்டவமாடுகிறது.
இரு மாநிலங்களிலும் வறட்சி அதிகமாக உள்ளது. அதிலும், கர்நாடகாவின் மண்டியா மாவட்டம்தான் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது. மண்டியா மாவட்டத்தில்தான் விவசாயிகள் அதிக அளவு தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
இவ்வாறு அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.
-
உச்ச நீதிமன்ற நீதிபதியாகும் கோவை மூத்த பெண் வழக்கறிஞர் மோகனா! யார் இவர்? -
ஒரே ட்வீட்.. உதயநிதி, எடப்பாடி டோட்டல் டேமேஜ்.. காவிரி விவகாரத்தில் மாணிக்கம் தாகூர் நறுக் -
எல்லாம் சரிதான்! SIRல் தவறு எதுவும் இல்லை! எல்லா மனுக்களையும் மொத்தமாக தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications