குரங்குகளுக்கு உணவு... 10 ஆண்டுகளில் ரூ. 200 கோடி ஊழல் - விசாரணை தேவை: மேனகாகாந்தி
டெல்லி : டெல்லியில் குரங்குகளுக்கு உணவு அளிக்க 10 ஆண்டுகளில் ரூ. 200 கோடி ஊழல் நடந்துள்ளதாக புகார் கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அமைச்சரும், விலங்குகள் நல ஆர்வலருமான மேனகாகாந்தி வலியுறுத்தியுள்ளார்.
தலைநகர் டெல்லியில் குரங்குகள் தொல்லை அதிகமானதைத் தொடர்ந்து, கடந்த 2007ம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றம் இது தொடர்பாக உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. அதாவது, ‘டெல்லியில் சுற்றித் திரியும் குரங்குகளைப் பிடித்து, ஹரியானாவில் உள்ள, 'அசோலா - பட்டி வனவிலங்கு சரணாலயத்தில் விட வேண்டும். அவற்றுக்கு தேவையான உணவுகளை, வனத்துறையினர் தர வேண்டும்' என அதில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை அடுத்து, அப்போதைய டெல்லி முதல்வரான ஷீலா தீட்சித் குரங்குகளுக்கு உணவு அளிப்பதற்காக ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால், இந்த தொகை போதாது என வன விலங்குகள் நல ஆர்வலரான மேனகா காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். எனவே, ஒதுக்கீட்டுத் தொகையை ஆண்டிற்கு ரூ. 20 கோடி என உயர்த்தியது டெல்லி அரசு.
இந்நிலையில், குரங்குகளுக்கு தேவையான பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் சப்ளை செய்த ஒப்பந்ததாரர்களுக்கு, டெல்லி மாநில அரசு 1 கோடி ரூபாய்க்கும் மேல் பாக்கி வைத்துள்ளதால் அவர்கள் தங்களின் சப்ளையை நிறுத்தி விட்டனர். இதனால், 16 ஆயிரம் குரங்குகள் பட்டினியால் வாடுவதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து, குரங்குகளுக்கு உணவு அளிப்பதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகையில் நடந்த மோசடி தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அமைச்சர் மேனகாகாந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, குரங்குகள் அடைக்கப்பட்ட இடத்தை சென்று பார்வையிட்டேன். அது, சரணாலயமே அல்ல; அங்கு மரங்களும் இல்லை. குரங்குகள் அடைக்கப்பட்டிருந்த இடம் தரிசு நிலம் என்பதால், அங்கு இயற்கையான உணவுகள் கிடைக்க வாய்ப்பு இல்லை.
குரங்களுக்கு உணவு அளிப்பதற்காக, 10 ஆண்டுகளில், 200 கோடி ரூபாயை, டெல்லி மாநில அரசு ஒதுக்கியும், அந்தப் பணம் எல்லாம் எங்கு சென்றது என, தெரியவில்லை. அந்தப் பணத்திற்கு, புதிய சரணாலயமே உருவாக்கி இருக்கலாம்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், போதிய உணவு கிடைக்காததால் கடந்தாண்டு மட்டும் ஆயிரக்கணக்கான குரங்கள் பலியானதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications