புத்தாண்டில் மணிப்பூரில் மீண்டும் வன்முறை.. 4 பேர் உயிரிழப்பு.. முதல்வர் நள்ளிரவில் பரபர ஆலோசனை
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் மெல்ல அமைதி திரும்பி வந்த நிலையில், இப்போது அங்கே மீண்டும் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளது. இதனால் அங்கே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த மோசமான சம்பவங்களை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறக்க மாட்டார்கள். அந்தளவுக்கு அங்கே இன கலவரம் மோசமாக இருந்தது.

உச்ச நீதிமன்றமே இந்த விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டுக் குட்டு வைத்தது. அதன் பிறகும் கூட மோதல் முழுமையாக முடிவுக்கு வர சில காலம் ஆனது. அதன் பின்னரே அங்கே மெல்ல அமைதியான சூழல் திரும்பி வந்தது.
மணிப்பூர்: இதற்கிடையே புத்தாண்டு தினத்தில் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை அரங்கேறியுள்ளது. இந்த வன்முறையில் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.. மேலும், பலர் காயமடைந்தனர், அதைத் தொடர்ந்து மணிப்பூர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஐந்து மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று மிரட்டி பணம் பறிப்பதற்காக ஆயுதங்களுடன் வந்ததாக தௌபல் மாவட்டத்தில் உள்ள உள்ளூர்வாசிகள் கூறினர். அப்போது அவர்கள் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நடந்த பிறகு, ஆத்திரமடைந்த உள்ளூர்வாசிகள் ஆயுதம் ஏந்தி வந்து ரகளையில் ஈடுபட்டவர்களின் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இது குறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், "துப்பாக்கியுடன் இங்கு அந்த குழு வந்தது. அவர்களுக்குத் தெரிந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென சண்டை மூண்டது. திடீரென ஏதேதோ நடக்கச் சண்டை ஏற்பட்டு, கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கினர்" என்றார்.
4 பேர் உயிரிழப்பு: இந்தச் சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் மெல்ல அமைதி திரும்பி வந்த நிலையில், திடீரென நடந்த இந்த அரங்கேறிய இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அம்மாநில முதல்வர் என் பிரேன் சிங் இது குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்த அவர், அமைதி காக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
அந்த வீடியோவில் பிரேன் சிங், "அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு நான் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். குற்றவாளிகளைப் பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அரசுக்கு உதவுமாறு லிலாங்கில் (சம்பவம் நடந்த இடம்) உள்ள மக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
இரவில் அவசர கூட்டம்: இதையடுத்து இரவில் அனைத்து அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி எம்எல்ஏக்கள் உடன் அவசர கூட்டத்தையும் முதல்வர் பிரேன் சிங் நடத்தினார். இந்த வன்முறையைத் தொடர்ந்து தௌபால், இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு, கக்சிங் மற்றும் பிஷ்னுபூர் மாவட்டங்களில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, மணிப்பூரின் எல்லை நகரமான மோரேவில் இதேபோலத் தான் கிளர்ச்சியாளர்களுக்கும் போலீஸ் கமாண்டோக்களுக்கு இடையே திடீரென துப்பாக்கிச் சூடு ஏற்பட்டது. அதில் நான்கு பாதுகாப்புப் படையினர் காயமடைந்தனர். அங்கே சிறு குண்டுவெடிப்பும் கூட நடந்ததாகக் கூறப்படுகிறது.
மணிப்பூரில் கடந்த மே 3ஆம் தேதி ஆரம்பித்த இன மோதல்கள் மிக மோசமாக இருந்தது. அப்போது அங்கே நடந்த சில மோசமான சம்பவங்கள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின.. இந்தக் கொடூரமான வன்முறைச் சம்பவத்தில் சுமார் 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், சுமார் 60,000 பேர் தங்கள் வீடுகளையும் இழக்கும் ஒரு சூழல் ஏற்பட்டது.
-
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
தடுமாறுதே தங்க சந்தை.. மாறி மாறி சரிந்து எகிறும் தங்கத்தின் விலை! இப்போ வாங்கலாமா? வேண்டாமா? -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
இனி பெட்ரோல் பங்க், சூப்பர் மார்கெட்களிலும் கூட மது கிடைக்கும்.. புதிய கலால் கொள்கை வெளியீடு -
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு என வட மாநிலங்களில் பரவும் வதந்தி..பங்குகளை நோக்கி படையெடுத்த மக்கள்! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
இந்தியாவில் 'வேலைவாய்ப்பு நெருக்கடி'.. கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அறிய வேண்டிய கசப்பான உண்மை












Click it and Unblock the Notifications