மியான்மருக்குள் நுழைந்து வடகிழக்கு மாநில தீவிரவாதிகளை 'வேட்டையாடிய' இந்திய ராணுவம்!!
இம்பால்: வடகிழக்கு மாநிலங்களில் தனிநாடு கோரும் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் மியான்மர் பகுதிகளுக்குள் இந்திய ராணுவம் நுழைந்து நேற்று இரவு அதிரடித் தாக்குதலை நடத்தியது. இத்தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டு அவர்களின் முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் கடந்த 4-ந் தேதியன்று ராணுவத்தினர் மீது வடகிழக்கு மாநில தீவிரவாதிகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 18 ராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அருணாசலப் பிரதேசத்தில் அஸ்ஸாம் ரைபிள்ஸ் முகாம் மீது நாகாலாந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

ராணுவத்தை கடும் அதிர்ச்சியடைய வைத்த இத்தகைய தாக்குதல்கள் அனைத்தும் அண்டை நாடான மியான்மருக்குள் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளாலேயே நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து மியான்மர் நாட்டுக்குள் நுழைந்து தீவிரவாதிகள் முகாம்களை அழிக்க மத்திய அரசு முடிவெடுத்தது.
இதற்கான உத்தரவை பிரதமர் அலுவலகம் நேற்று இரவு பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகத்தின் நேரடிக் கண்காணிப்பில் நேற்று இரவு மியான்மர் எல்லைக்குள் நுழைந்து ராணுவம் தீவிரவாதிகளைத் தேடி அழிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டது.
இது தொடர்பாக ராணுவ நடவடிக்கைகளுக்கான கூடுதல் டைரக்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ரன்பீர்சிங் கூறியதாவது:
மியான்மரில் இருந்து ஊடுருவும் தீவிரவாதிகள் நமது எல்லைக்குள் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக நம்பகமான உளவுத்துறை தகவல்கள் வந்து கொண்டிருந்தன. ஏற்கெனவே ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளே மீண்டும் தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து மியான்மர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ படையினர் மியான்மருக்குள் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அப்போது இந்தியா- மியான்மர் எல்லையில் அதாவது நாகாலாந்து- மணிப்பூர் மாநில எல்லைப் பகுதியில் இரு இடங்களில் இரு தீவிரவாத குழுக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவர்களது முகாம்கள் அழிக்கப்பட்டன. பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மியான்மர்- இந்தியா இருநாடுகளும் இத்தகைய பயங்கரவாதிகளை ஒடுக்க தொடர்ந்தும் இத்தகைய ராணுவ நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொண்டு வருகிறது.
இவ்வாறு ரன்பீசிங் கூறினார்.
மியான்மருக்குள் நுழைந்து தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்திய அனைத்து ராணுவத்தினரும் பாதுகாப்பாக திரும்பி வந்துவிட்டனர் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையின் போது எம்-17 ரக ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சுமார் 13 மணி நேரம் நடைபெற்ற இந்த நடவடிக்கையில் தீவிரவாதிகளின் இரு முகாம்களும் அழிக்கப்பட்டுள்ளன. சுமார் 50 தீவிரவாதிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் எல்லை தாண்டி மியான்மருக்குள் நுழைந்து தீவிரவாதிகளை தேடி அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது ராணுவத்தினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications