மணிப்பூரில் ராணுவத்தினர் மீதான தாக்குதல் பின்னணியில் சீனா?
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மணிப்பூரில் தனிநாடு கோரும் தீவிரவாதிகளின் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தி 18 ராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் சீனாவின் தொடர்பு குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

மணிப்பூரில் வியாழக்கிழமையன்று ராணுவ வாகனம் மீது 4 தீவிரவாத இயக்கங்கள் கூட்டாக தாக்குதல் நடத்தின. இதில் 18 ராணுவத்தினர் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த 20 ஆண்டுகளில் வடகிழக்கு மாநிலம் ஒன்றில் நடத்தப்பட்டுள்ள மிகவும் பயங்கரமான தாக்குதல் இது.
இந்தத் தாக்குதலின் பின்னணியில் சீனாவின் தொடர்பு, உளவுத்துறையின் தோல்வி, மியான்மர் தீவிரவாத குழுக்களுடனான தொடர்பு ஆகியவை குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.
- ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய அமைப்புகளில் ஒன்று அஸ்ஸாம் தனிநாடு கோரும் உல்ஃபா அமைப்பு.
- இந்த உல்ஃபா பிரிவின் தலைவரான பரேஸ் பரூவா, பல ஆண்டுகளாக சீனாவின் யூனான் மாகாணத்தில்தான் தலைமறைவாக இருந்து வருகிறார்.
- பரேஸ் பரூவாவின் அமைப்புக்கு சீனா தாராளமான ஆயுத உதவிகளை அளித்து வருகிறது.
- இங்கிருந்தே அஸ்ஸாமில் பல தாக்குதல்களை பரேஸ் பரூவா நிகழ்த்தியும் இருக்கிறார்.
- தற்போதைய தாக்குதலிலும் சீனா பின்ன்ணியில் இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
- கடந்த 15 நாட்களாக மியான்மர்-இந்தியா எல்லையில் தீவிரவாதிகள் குவிந்து வந்திருந்ததை ரா மற்றும் ஐ.பி. ஆகியவை ராணுவத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
- ஆனால் ரா, ஐ.பி.-யின் எச்சரிக்கையை ராணுவ உளவு அமைப்புகள் புறக்கணித்துள்ளது.
- அதேபோல் மியான்மரில் காசின் விடுதலை ராணுவத்துக்கும் இத்தாக்குதலில் தொடர்பிருக்கலாம் என கருதப்படுகிறது.
- இந்த அமைப்புதான் பல்வேறு தீவிரவாத குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்திருக்கிறது.
- இந்த மியான்மர் ஆயுதக் குழுவின் கட்டுப்பாட்டில் மனித நடமாட்டமே இல்லாத வனப்பகுதி இருப்பதால் மியான்மர் அரசும் கண்டுகொள்ளாமலே இருந்து வருகிறது.
- இம்மூன்று கோணங்களில் மணிப்பூர் தாக்குதலை மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.












Click it and Unblock the Notifications