நிர்வாணமாக்கிய கும்பலிடம் ஒப்படைத்ததே போலீசாம்.. அண்ணனின் நண்பன் செய்த கொடூரம்! மணிப்பூர் பெண் பகீர்

Subscribe to Oneindia Tamil

மணிப்பூர்: நிர்வாணமாக்கி இழுத்து சென்ற கொடூர கும்பலில் தன்னுடைய சகோதரனின் நண்பனும் இருந்ததாகவும், போலீசார்தான் தங்கள் மக்களை மெய்தி சமூகத்தினரிடம் காட்டிக்கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.

உலகையை உலுக்கும் வகையில் மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து சென்று கும்பலாக பலாத்காரம் செய்யப்பட்டதுடன் அவர்களின் சகோதரர் உட்பட 2 ஆண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர்.

Manipur police handed over us to the methi mob - Victim women interview

இதனால் நாளை காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலர் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக மணிப்பூர் முதலமைச்சரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

இந்த நிலையில் சம்பவம் நடந்து 78 நாட்கள் கழித்து ஒருவரை கைது செய்து உள்ளது மணிப்பூர் மாநில காவல்துறை. அந்த வீடியோவில் முதல் வரிசையில் பெண்ணை இழுத்து சென்ற பச்சை டீ சர்ட் அணிந்த ஒரு 32 வயது இளைஞர் ஹுய்ரெம் ஹெரொதாஸ் மெய்தியை கைது செய்து உள்ளதாக அம்மாநில போலீஸ் தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில் நிர்வாணமாக்கி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தனியார் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்து இருக்கிறார். அதில், பேசிய அவர், "அந்த கும்பலிடம் எங்களை ஒப்படைத்ததே காவல்துறைதான். எங்கள் கிராமம் மீது தாக்குதல் நடத்திய கும்பலுடன் போலீசாரும் இருந்தனர்.

எங்களை வீட்டுக்கு அருகிலிருந்து அழைத்து சென்று, கிராமத்திலிருந்து சிறிது தூரம் கடந்து அந்த கும்பலுடன் சாலையில் விட்டுச் சென்றதே போலீஸ். அந்த வீடியோவில் இருந்த 2 பெண்களில் இளம் வயது பெண்ணின் தந்தை மற்றும் அவரது இளைய சகோதரரையும் அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்து இருக்கிறது.

Manipur police handed over us to the methi mob - Victim women interview

இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ இருப்பது கூட எனக்கோ எனது குடும்பத்தினருக்கோ தெரியாது. அந்த கும்பலில் என்னுடைய சகோதரனின் நண்பனும் இருந்தான். அவர் உட்பட ஒரு சிலரை மட்டுமே என்னால் அடையாளம் காட்ட முடியும். மற்றவர்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது." என்றார்.

இதில் ஜாதி வெறியால் நண்பனின் சகோதரி என்று கூட பார்க்காமல் நிர்வாணமாக்கி கூட்டு பலாத்காரம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மக்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட காவல்துறையே உயிருக்கு பயந்து பாதுகாப்பு கேட்ட பழங்குடி மக்களை கொலைகார கும்பலிடம் ஒப்படைத்து இந்த செயலுக்கு துணைபோய் இருப்பது பேரதிர்ச்சியாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+