நிர்வாணமாக்கிய கும்பலிடம் ஒப்படைத்ததே போலீசாம்.. அண்ணனின் நண்பன் செய்த கொடூரம்! மணிப்பூர் பெண் பகீர்
மணிப்பூர்: நிர்வாணமாக்கி இழுத்து சென்ற கொடூர கும்பலில் தன்னுடைய சகோதரனின் நண்பனும் இருந்ததாகவும், போலீசார்தான் தங்கள் மக்களை மெய்தி சமூகத்தினரிடம் காட்டிக்கொடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார்.
உலகையை உலுக்கும் வகையில் மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து சென்று கும்பலாக பலாத்காரம் செய்யப்பட்டதுடன் அவர்களின் சகோதரர் உட்பட 2 ஆண்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உள்ளது. பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த சம்பவம் தொடர்பாக இன்று நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகள் முழக்கங்களை எழுப்பினர்.

இதனால் நாளை காலை 11 மணி வரை இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலர் இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக மணிப்பூர் முதலமைச்சரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
இந்த நிலையில் சம்பவம் நடந்து 78 நாட்கள் கழித்து ஒருவரை கைது செய்து உள்ளது மணிப்பூர் மாநில காவல்துறை. அந்த வீடியோவில் முதல் வரிசையில் பெண்ணை இழுத்து சென்ற பச்சை டீ சர்ட் அணிந்த ஒரு 32 வயது இளைஞர் ஹுய்ரெம் ஹெரொதாஸ் மெய்தியை கைது செய்து உள்ளதாக அம்மாநில போலீஸ் தெரிவித்து இருக்கிறது.
இந்த நிலையில் நிர்வாணமாக்கி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண் தனியார் ஆங்கில ஊடகத்துக்கு பேட்டியளித்து இருக்கிறார். அதில், பேசிய அவர், "அந்த கும்பலிடம் எங்களை ஒப்படைத்ததே காவல்துறைதான். எங்கள் கிராமம் மீது தாக்குதல் நடத்திய கும்பலுடன் போலீசாரும் இருந்தனர்.
எங்களை வீட்டுக்கு அருகிலிருந்து அழைத்து சென்று, கிராமத்திலிருந்து சிறிது தூரம் கடந்து அந்த கும்பலுடன் சாலையில் விட்டுச் சென்றதே போலீஸ். அந்த வீடியோவில் இருந்த 2 பெண்களில் இளம் வயது பெண்ணின் தந்தை மற்றும் அவரது இளைய சகோதரரையும் அந்த கும்பல் கொடூரமாக கொலை செய்து இருக்கிறது.

இந்த கொடூர சம்பவத்தின் வீடியோ இருப்பது கூட எனக்கோ எனது குடும்பத்தினருக்கோ தெரியாது. அந்த கும்பலில் என்னுடைய சகோதரனின் நண்பனும் இருந்தான். அவர் உட்பட ஒரு சிலரை மட்டுமே என்னால் அடையாளம் காட்ட முடியும். மற்றவர்களை பற்றி எனக்கு எதுவும் தெரியாது." என்றார்.
இதில் ஜாதி வெறியால் நண்பனின் சகோதரி என்று கூட பார்க்காமல் நிர்வாணமாக்கி கூட்டு பலாத்காரம் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மக்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட காவல்துறையே உயிருக்கு பயந்து பாதுகாப்பு கேட்ட பழங்குடி மக்களை கொலைகார கும்பலிடம் ஒப்படைத்து இந்த செயலுக்கு துணைபோய் இருப்பது பேரதிர்ச்சியாக உள்ளது.
-
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
“போர் நடந்தாலும்.. எரிபொருள் கொள்முதலில் பாதிப்பு இருக்காது”.. நாடாளுமன்றத்தில் மோடி உறுதி! -
பாஜகவில் இருந்து விலகலா.. ஆதரவாளர்களுடன் ஆலோசனை குறித்து சரத்குமார் பரபரப்பு விளக்கம் -
அமமுகவுக்கு 12 சீட்? குக்கர் சின்னத்தில் போட்டி.. பியூஷ் கோயல் - டிடிவி தினகரன் சந்திப்பில் உறுதி?! -
மம்தாவுக்கு குடைச்சலை கொடுக்கும் பாஜக.. மேற்கு வங்கத்தில் மலரும் தாமரை? 7 முக்கிய பாயிண்டுகள் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்!












Click it and Unblock the Notifications