அக்.29-ல் ஒரே மேடையில் பிரதமர் மன்மோகன்சிங்- நரேந்திர மோடி பங்கேற்பு!
அகமதாபாத்: பிரதமர் மன்மோகன்சிங்கும் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியும் வரும் 29-ந் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஒரே மேடையில் பேச இருக்கின்றனர்.
குஜராத் முதல்வரும் பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி தாம் பங்கேற்கும் அனைத்து பொதுக் கூட்டங்களிலும் இப்படியெல்லாம் ஒரு பிரதமர் இருக்க முடியுமா? இப்படியும் ஒரு பிரதமரா? என்று மன்மோகன்சிங்கை வறுத்தெடுத்து வருகிறார்.

இந்நிலையில் குஜராத்தின் அகதமாபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவு சொசைட்டி சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் பிரமாண்ட அருங்காட்சியக திறப்பு விழா வரும் 29ந் தேதி நடைபெறுகிறது. இந்த திறப்பு விழாவுக்கான அழைப்பிதழில் தலைமை விருந்தினராக பிரதமர் மன்மோகன்சிங்கும், சிறப்பு விருந்தினராக நரேந்திர மோடியும் பங்கேற்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் பிரதமர் மன்மோகன்சிங்கும், பாஜகவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியும் நேருக்கு நேர் சந்திக்க இருக்கும் காட்சியை நாடு காண இருக்கிறது.












Click it and Unblock the Notifications