சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எப். முகாம் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல்!
Subscribe to Oneindia Tamil
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் சி.ஆர்.பி.எப். முகாம் மீது மாவோயிஸ்டுகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பலகன்குண்டா பகுதியில் 40க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் ஒன்றுதிரண்டு திடீரென சி.ஆர்.பி.எப். முகாம் மீது கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பி ஓடினர்.
இத்தாக்குதலில் சி.ஆர்.பி.எப். ஜவான் ஒருவர் படுகாயமடைந்தார். இதேபகுதியில்தான் கடந்த ஏப்ரல் 10-ந் தேதியன்று மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இதில் 7 போலீசார் கொல்லப்பட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications