ரூ500, ரூ1,000 நோட்டு செல்லாது என்பது யாருக்கு தெரியுமா பயங்கர ஷாக்?
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதால் அதிர்ச்சியடைந்துள்ளனர் மாவோயிஸ்டுகள்.
ராஞ்சி/ராய்ப்பூர்: மத்திய அரசு கறுப்பு பணத்தை ஒழிக்கத்தான் ரூ500, ரூ1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தாலும் உண்மையில் இந்த அறிவிப்பால் பேரதிர்ச்சிக்குள்ளாகி இருப்பது மாவோயிஸ்டுகள்தான்.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராஞ்சியை சேர்ந்த நந்த கிஷோர் என்ற பெட்ரோல் பங்க் உரிமையாளர் கடந்த 10-ந் தேதியன்று ரூ25 லட்சம் ரொக்கத்துடன் வங்கிக்கு சென்றார். அவரை வழிமறித்து போலீசார் நடத்திய விசாரணையில் அப்பணம், மாவோயிஸ்டுகளுக்கு சொந்தமானது என தெரியவந்தது.

ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் தங்களிடம் உள்ள பணத் தாள்களை மாற்றும் முயற்சியில் மாவோயிஸ்டுகள் மும்முரமாக இறங்கியுள்ளனர். இதனால் தங்கள் ஆதிக்கம் உள்ள பகுதிகளின் பெரும் முதலாளிகள் முதல் கிராம மக்கள் வரை அனைவரிடமும் பணத்தை கொடுத்து வங்கிகளில் மாற்ற சொல்லுகின்றனர்.
இதனால் மாவோயிஸ்டுகல் நடமாடும் பகுதிகளில் வங்கிகள் மீதான கண்காணிப்பை பாதுகாப்பு படையினர் அதிகரித்துள்ளனர். தற்போதைய நிலையில் பெருநிறுவனங்களிடம் இருந்து மாவோயிஸ்டுகள் வரியாக வசூலித்துள்ள தொகை மட்டும் ரூ7,000 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
தற்போது இவ்வளவு பெரிய தொகுதியை உடனே மாற்ற வேண்டியாக நெருக்கடியில் மாவோயிஸ்டுகள் உள்ளனர். இனிவரும் நாட்களில் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் பெரும் தொகையான பணத்துடன் பிடிபடும் செய்திகள் வரும் என்கின்றன பாதுகாப்பு படை வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications