சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் வெறித்தனமான தாக்குதல்- பாதுகாப்புப் படையினர் 17 பேர் பலி
சுக்மா: சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 17 பாதுகாப்பு படையினர் பலியாகி உள்ளனர்.
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் அதிகம் உள்ள சுக்மா பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். பாதுகாப்புப் படையினர் கோப்ரா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்டோர் இணைந்து கூட்டாக தேடுதல் வேட்டை நடத்தினர்.

சுக்மாவின் கோரஜ்குடா மலைப்பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் முன்னேறிச் சென்ற போது மாவோயிஸ்டுகள் மறைந்திருந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றது.
இந்த மோதல் பல மணிநேரம் நீடித்தது. இதில் பாதுகாப்புப் படையினர் பலர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. மேலும் 17 பாதுகாப்புப் படையினரை காணவில்லை என்றும் செய்திகள் கூறின.
இதனையடுத்து காணாமல் போன பாதுகாப்புப் படையினரை மீட்பதற்காக நூற்றுக்கணக்கான வீரர்கள் மீண்டும் வனப்பகுதிக்குள் தேடுதல் நடவடிக்கையை முடுக்கிவிட்டனர். இந்த நிலையில் 17 பாதுகாப்புப் படையினர், மாவோயிஸ்டுகளுடனான மோதலில் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. அவர்களது சடலங்கள் வனப்பகுதிகளில் மீட்கப்பட்டுள்ளன.
2017-ம் ஆண்டுக்குப் பின்னர் பாதுகாப்புப் படையினருக்கு எதிராக மாவோயிஸ்டுகள் நடத்தியுள்ள மிகப் பெரிய தாக்குதல் நடவடிக்கை இது. மேலும் பாதுகாப்புப் படையினர் வசம் இருந்த ஆயுதங்களையும் மாவோயிஸ்டுகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications