நக்சலைட்டுகளால் கடத்தப்பட்ட துணை ராணுவ படை வீரர் ராகேஷ்வர் சிங் விடுவிப்பு
சத்தீஸ்கரில் நடந்த என்கவுன்ட்டரில் நக்சலைட்டுகளால் பிணைக் கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு படை வீரர் ராகேஷ்வர் சிங் விடுவிக்கப்பட்டுள்ளார்.
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்சலைட்டுகளுடன் ஏற்பட்ட சண்டையின் போது கடத்தப்பட்ட துணை ராணுவ படை வீரர் ராகேஷ்வர் சிங் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். ராகேஸ்வர் சிங் குடும்பத்தினரின் வேண்டுகோளினை ஏற்று அவரை நக்சலைட்டுகள் விடுவித்தனர்.
சத்தீஸ்கார் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் கடந்த 3ஆம் தேதி பாதுகாப்பு படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிராக மாபெரும் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது, வனப்பகுதிக்குள் மறைந்திருந்த நக்சலைட்டுகள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால், இரு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.

துப்பாக்கிச்சண்டையில் நக்சலைட்டுகள் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 22 பேர் வீரமரணமடைந்தனர். பலர் படுகாயமடைந்தனர். நக்சலைட்டுகள் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலின் போது பாதுகாப்புபடையின் 'கோப்ரா' கமாண்டோ படை பிரிவை சேர்ந்த வீரர் ஒருவர் மாயமானார். அவரை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக நக்சலைட்டுகள் தரப்பில் அறிக்கை வெளியானது. அதில் பிஜாப்பூர் தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 24 பேர் உயிரிழந்ததாகவும் 31 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், தங்கள் தரப்பில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக நக்சலைட்டுகள் தெரிவித்துள்ளனர். இந்த அறிக்கையில் மாயமான பாதுகாப்பு படைவீரர் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதாக நக்சலைட்டுகள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், கடத்தப்பட்ட பாதுகாப்பு படைவீரரின் புகைப்படத்தை நக்சலைட்டுகள் நேற்று வெளியிட்டனர். கடத்தப்பட்ட பாதுகாப்பு படைவீரர் 'கோப்ரா' கமாண்டோ படை பிரிவை சேர்ந்த ராகேஷ்வர் சிங் மன்ஹஸ் என்பது தெரியவந்துள்ளது. கடத்தப்பட்ட பாதுகாப்பு படைவீரர் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவரை துன்புறுத்தமாட்டோம் என்றும் நக்சலைட்டுகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பாதுகாப்பு படைவீரர் ராகேஷ்வர் சிங் மன்ஹஸை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு மத்தியஸ்தரை நியமிக்க வேண்டும் எனவும் நக்சலைட்டுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமாண்டோ வீரர் ராகேஷ்வர், ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர். அவரை நக்சல்களின் பிடியில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி, அவருடைய குடும்பத்தினர் ஜம்மு - பூஞ்ச் நெடுஞ்சாலையில் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். "தயவுசெய்து, என் தந்தையை விடுவிக்கவும்" என ராகேஷ்வரின் ஐந்து வயது மகள் ஷ்ராக்வி நக்சல்களிடம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில் ராகேஷ்வர் சிங் மன்ஹஸ் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினரின் உருக்கமான வேண்டுகோளினை ஏற்று விடுவிக்கப்பட்டுள்ளார். சிறைபிடிக்கப்பட்ட கமாண்டோவின் விடுதலையை சத்தீஸ்கர் ஐ.ஜி உறுதிப்படுத்தியுள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications