மிஸ்டு கால்... நின்று போன கல்யாணம்... சமாதானம் செய்யப்போன தாய்மாமா அடித்துக் கொலை!
காசியாபாத்: உத்திரப்பிரதேசத்தில் பெண் வீட்டார் போனை எடுக்காததால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நடந்துள்ளது. மேலும் இது தொடர்பாக சமாதானம் செய்யப்போன மணமகளின் தாய்மாமாவை அடித்துக் கொலை செய்த மாப்பிள்ளை வீட்டாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில், காசியாபாத்திற்கு அருகில் உள்ள முரத்நகரில் இச்சம்பவம் நடந்துள்ளது. கடந்த மாதம் 20-ம்தேதி மணமகன் வீட்டைச் சேர்ந்த ஒருவர் மணமகளின் தந்தைக்கு போன் செய்துள்ளார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. இதனால் கோபம் அடைந்த மாப்பிள்ளை வீட்டார் உடனடியாக திருமணத்தை நிறுத்திவிட்டார்கள்.
போனை எடுக்காத ஆத்திரத்தில் திருமணம் நிறுத்தப்பட்டதால், பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக மாப்பிள்ளை வீட்டாரைச் சமாதானப் படுத்த மணமகளின் தாய்மாமா அவரது நண்பரோடு சென்றார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு தங்கள் வீட்டிற்கு வெளியே அமர்ந்து பெண்ணின் மாமா பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த மணமகன், மணமகளின் மாமாவைச் சரமாரியாக தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதலைத் தடுக்க வந்த மாமாவின் நண்பருக்கும் காயம் ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலில் பலத்த காயம் அடைந்த இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டனர். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் மணமகளின் மாமா பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பரின் நிலைமை இன்னமும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதல் தொடர்பாக 3 பேரைக் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள மீதமுள்ள குற்றவாளிகளையும் தேடி வருகின்றனர்.
போனை எடுக்காத காரணத்தால் திருமணம் நின்றதும், இந்த விவகாரத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டதும் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக












Click it and Unblock the Notifications