For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உ.பி.: திருமணமான இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேர்

By Siva
Google Oneindia Tamil News

முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தில் 27 வயது திருமணமான பெண்ணை 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ள கொடுமை நடந்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் முசாபர்நகரைச் சேர்ந்த 27 வயது திருமணமான பெண் ஒருவர் கட்டிட வேலை செய்து வருகிறார். அவர் அப்பகுதியில் நடந்து வரும் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். நேற்று வேலைக்கு சென்ற இடத்தில் அவரை குன்வர்பால் மற்றும் போக்கர் ஆகிய 2 பேர் கட்டுமானப்பணி நடந்து வரும் கட்டிடத்தின் அறை ஒன்றுக்கு இழுத்துச் சென்றுள்ளனர்.

அந்த அறையில் வைத்து அவர்கள் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் இது பற்றி யாரிடமும் கூறக் கூடாது என அவரை மிரட்டியுள்ளனர். அந்த பெண் தனக்கு நடந்த கொடுமை பற்றி தனது கணவரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குன்வர்பால் மற்றும் போக்கரை தேடி வருகிறார்கள்.

போலீசார் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சமாஜ்வாடி கட்சி ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இளம்பெண்கள் முதல் சிறுமிகள் வரை பலர் அங்கு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர்.

English summary
A 27-year-old married woman was allegedly gang-raped by two persons who also filmed the act in Shamli district, police said on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X