Sikkim Avalanche: சிக்கிம் பனிச் சரிவு: பலி எண்ணிக்கை 7; மீட்பு பணிகள் நிறுத்தம்
காங்டாங்: சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி சுற்றுலாப்பயணிகள் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர். அனைத்து சுற்றுலாப்பயணிகள் மற்றும் சுற்றுலா வாகனங்களும் கணக்கில் வந்துள்ளன. எனவே மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சுற்றுலாப்பயணிகளின் விரிவான விவரம் விரைவில் வெளியிடப்படும்" என்று தேசிய பேரிடர் மீட்பு படை அறிக்கை வெளியிட்டுள்ளது.
சிக்கிம் மாநில தலைநகர் காங்டாங் மற்றும் நாதுலா கணவாய் இடையே ஜவர்ஹர்லால் நேரு சாலையில் 15-வது மைல் பகுதியில் இன்று பிற்பகல் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது.
இந்த பனிச்சரிவில் 150க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கினர். இதனையடுத்து பனிச்சரிவில் சிக்கிய சுற்றுலா பயணிகளை மீட்கும் பணிகள் நடைபெற்றன.

7 பேர் உயிரிழப்பு
தசிக்கிம் பனிச்சரிவில் சிக்கி 4 ஆண்கள், ஒரு பெண், ஒரு குழந்தை என 7 பேர் பலியாகினர். 12 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு எஸ்டிஎன்எம் மருத்துவமனை மற்றும் சிஆர்ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிக்கிம் மாநில போலீசார், சிக்கிம் டிராவல் ஏஜெண்டுகள் சங்கம், சுற்றுலாத்துறை அதிகாரிகள், வாகன ஓட்டுநர்களே மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ராணுவமும் மீட்புப் பணியில் இணைந்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள்
சிக்கிம் காவல்துறை உயர் அதிகாரி சோனம் டென்சிங் பூட்டியா கூறுகையில், பனிச்சரிவு இருப்பதால் 13-வது மைல் வரை செல்லத்தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் சுற்றுலாப் பயணிகள் கட்டாயப்படுத்தியே சென்றனர். இதனால் 15-வது மைல் பகுதியில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர் என்றார். இதனிடையே, மீட்பு பணிகள் நிறுத்தப்படுவதாக தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.

விவரம் விரைவில் வெளியிடப்படும்
இதுதொடர்பாக தேசிய பேரிடர் மீட்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், " சுற்றுலாப்பயணிகள் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர். அனைத்து சுற்றுலாப்பயணிகள் மற்றும் சுற்றுலா வாகனங்களும் கணக்கில் வந்துள்ளன. எனவே மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சுற்றுலாப்பயணிகளின் விரிவான விவரம் விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் நிறுத்தம்
இதனிடையே, பனிச்சரிவு ஏற்பட்ட அதேபகுதியில் மீண்டும் ஒரு பனிச்சரிவு மாலை 5.35 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவும் ஆரம்பித்ததால் மீட்பு பணிகள் ஆபத்தானதாக மாறும். மேலும் பனிச்சரிவுகள் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை மாவட்ட நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

சாலை மூடப்பட்டுள்ளது
பனிச்சரிவுகள் மீண்டும் ஏற்படுவதால் ஜவஹர்லால் நேரு சாலை மூடப்பட்டுள்ளது எனவும் ராணுவம் தெரிவித்துள்ளது. சிக்கிம் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன்னர் சாங்கு ஏரி பகுதிக்கு செல்லும் பகுதியில் கடும் பனிப்பொழிவில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் சிக்கினர். ஆப்ரேஷன் ஹிம்ராஹத் பெயரில் சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications