Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sikkim Avalanche: சிக்கிம் பனிச் சரிவு: பலி எண்ணிக்கை 7; மீட்பு பணிகள் நிறுத்தம்

Subscribe to Oneindia Tamil

காங்டாங்: சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி சுற்றுலாப்பயணிகள் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர். அனைத்து சுற்றுலாப்பயணிகள் மற்றும் சுற்றுலா வாகனங்களும் கணக்கில் வந்துள்ளன. எனவே மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சுற்றுலாப்பயணிகளின் விரிவான விவரம் விரைவில் வெளியிடப்படும்" என்று தேசிய பேரிடர் மீட்பு படை அறிக்கை வெளியிட்டுள்ளது.

சிக்கிம் மாநில தலைநகர் காங்டாங் மற்றும் நாதுலா கணவாய் இடையே ஜவர்ஹர்லால் நேரு சாலையில் 15-வது மைல் பகுதியில் இன்று பிற்பகல் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது.

இந்த பனிச்சரிவில் 150க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கினர். இதனையடுத்து பனிச்சரிவில் சிக்கிய சுற்றுலா பயணிகளை மீட்கும் பணிகள் நடைபெற்றன.

7 பேர் உயிரிழப்பு

7 பேர் உயிரிழப்பு

தசிக்கிம் பனிச்சரிவில் சிக்கி 4 ஆண்கள், ஒரு பெண், ஒரு குழந்தை என 7 பேர் பலியாகினர். 12 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு எஸ்டிஎன்எம் மருத்துவமனை மற்றும் சிஆர்ஹெச் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிக்கிம் மாநில போலீசார், சிக்கிம் டிராவல் ஏஜெண்டுகள் சங்கம், சுற்றுலாத்துறை அதிகாரிகள், வாகன ஓட்டுநர்களே மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பின்னர் ராணுவமும் மீட்புப் பணியில் இணைந்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகள்

சிக்கிம் காவல்துறை உயர் அதிகாரி சோனம் டென்சிங் பூட்டியா கூறுகையில், பனிச்சரிவு இருப்பதால் 13-வது மைல் வரை செல்லத்தான் அனுமதிக்கப்பட்டிருந்தது. ஆனால் சுற்றுலாப் பயணிகள் கட்டாயப்படுத்தியே சென்றனர். இதனால் 15-வது மைல் பகுதியில் ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர் என்றார். இதனிடையே, மீட்பு பணிகள் நிறுத்தப்படுவதாக தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது.

விவரம் விரைவில் வெளியிடப்படும்

விவரம் விரைவில் வெளியிடப்படும்

இதுதொடர்பாக தேசிய பேரிடர் மீட்பு படை வெளியிட்டுள்ள அறிக்கையில், " சுற்றுலாப்பயணிகள் 7 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர். அனைத்து சுற்றுலாப்பயணிகள் மற்றும் சுற்றுலா வாகனங்களும் கணக்கில் வந்துள்ளன. எனவே மீட்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சுற்றுலாப்பயணிகளின் விரிவான விவரம் விரைவில் வெளியிடப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்பு பணிகள் நிறுத்தம்

மீட்பு பணிகள் நிறுத்தம்

இதனிடையே, பனிச்சரிவு ஏற்பட்ட அதேபகுதியில் மீண்டும் ஒரு பனிச்சரிவு மாலை 5.35 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவும் ஆரம்பித்ததால் மீட்பு பணிகள் ஆபத்தானதாக மாறும். மேலும் பனிச்சரிவுகள் ஏற்படும் என்ற அச்சம் காரணமாக மீட்பு மற்றும் தேடுதல் பணிகளை மாவட்ட நிர்வாகம் நிறுத்தியுள்ளது.

சாலை மூடப்பட்டுள்ளது

சாலை மூடப்பட்டுள்ளது

பனிச்சரிவுகள் மீண்டும் ஏற்படுவதால் ஜவஹர்லால் நேரு சாலை மூடப்பட்டுள்ளது எனவும் ராணுவம் தெரிவித்துள்ளது. சிக்கிம் மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன்னர் சாங்கு ஏரி பகுதிக்கு செல்லும் பகுதியில் கடும் பனிப்பொழிவில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் சிக்கினர். ஆப்ரேஷன் ஹிம்ராஹத் பெயரில் சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் பாதுகாப்பாக மீட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+