உ.பி.: உறவுக்கு மறுத்த மனைவியை கொலை செய்த கணவன்
ஆக்ரா: மதுராவில் உறவுக்கு மறுத்த மனைவியை 40 வயது நபர் கொலை செய்து உடலை பாழும் கிணற்றில் வீசிவிட்டார்.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள மதுராவை சேர்ந்தவர் பிர்ஜு(40). அவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அவர் ஹீரா தேவி என்ற மறுமணம் செய்து கொண்டார்.

பிர்ஜுவுக்கு குழந்தை வேண்டும் என்ற ஆசை. ஆனால் ஹீராவோ தன்னை தொடக் கூடாது என்று கணவருக்கு உத்தரவிட்டார். இதனால் கோபம் அடைந்த பிர்ஜு தனது 2வது மனைவியை கொலை செய்து உடலை வீட்டிற்கு அருகில் உள்ள பாழும் கிணற்றில் வீசிவிட்டார்.
ஹீராவை காணாததால் அவரது சகோதரி இது குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் பிர்ஜுவிடம் கேட்டதற்கு தனக்கு எதுவும் தெரியாது என முதலில் கூறினார். பின்னர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
மேலும் ஹீராவின் உடலை வீசிய கிணற்றுக்கு போலீசாரை அழைத்துச் சென்றார். கிணற்றில் கிடந்த ஹீராவின் உடலை மீட்ட போலீசார் அதை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிர்ஜுவை கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications